போலீஸ் ஸ்டேஷனுக்கு பொண்ணுங்க வரலாமா கிளம்பு எங்க உங்கப்பனைக் கூப்பிடு உன்னை கூட்டிட்டு வந்துட்டு அவரு அங்க என்ன செய்றாரு” என அவன் அவரை தேட அவரோ நீலாம்பரியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவள் பதில் சொல்ல தடுமாறுவதைக் கண்டு நொந்துப் போனான்
”மாட்டிக்கிட்டாளா இவள் எதுக்கு இப்ப போலீஸ் ஸ்டேஷன் வரனும், சரி இப்ப என்ன செய்யலாம் நம்மாளை நாமதான் காப்பாத்தனும்” என நினைத்தவன் சட்டென ராமசந்திரனிடம் காதம்பரியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்று அவரிடம் விட்டான்
”நீ ஏன் இங்க வந்த, பதில் சொல்லாம நின்னா என்ன அர்த்தம்” என நீலாம்பரியை கேள்வியாக கேட்க அதற்கு பதில் சொல்ல தயங்கிய நீலாம்பரியின் பக்கம் வந்து நின்ற அழகர் ராமசந்திரனிடம்
”மாமா உங்களுக்கு அறிவில்லையா ஸ்டேஷனுக்கு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கீங்க, முதல்ல காதம்பரியை கூட்டிட்டு போங்க மாமா” என சொல்ல அவரோ அழகரிடம்
”சரிப்பா ஆனா நீலாம்பரி எதுக்காக இங்க வந்தா”
“எதுக்கா அவள் என் க்ளாஸ் மேட் மாமா, நானும் அவளும் எம்பிஏ ஒண்ணா படிக்கிறோம். அவள் அம்மா மதுரைக்காரங்களாமே நானும் மதுரைதான் அதான் என் மேல பாவப்பட்டு வந்திருக்கா, அவளையும் கூட்டிட்டு போங்க மாமா, இந்த மாதிரி இடங்களுக்கு பொண்ணுங்க வர்றது தப்பு, ஊர் தப்பா பேசும் கூட்டிட்டு போங்க” என சொல்லவும் ராமசந்திரனின் சந்தேகம் விலகியது. காதம்பரியோ
”ஐ ஜாலி அப்ப நாம ஒண்ணா ஒரே காலேஜ்ல படிக்கப்போறோமா” என ஆசையாக கேட்க அவளது தலையில் இன்னொரு குட்டு வைத்தவன் அவள் அலறவும்
”இன்னும் 2 நிமிஷம் நீ இங்க இருந்த அடிவெளுத்துடுவேன் கிளம்புடி, வயசு பொண்ணு வந்து நிக்கற இடத்தை பாரு போடி” என விரட்ட ராமசந்திரன் அழகரிடம்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.