குமரன் அவனுக்கு போன் செய்தான்.
”ஹலோ நான் குமரன் பேசறேன்”
“நண்பா சொல்லு நண்பா, நான் ஜீவாதான் பேசறேன்”
”நாளைக்கு பொண்ணு பார்க்க போகனும், எங்க நீ வேலை கவனத்தில மறந்துடுவியோன்னு தான் ஞாபகப்படுத்தலாம்னு போன் செஞ்சேன்”
“நான் மறக்கலை கண்டிப்பா நான் பொண்ணு பார்க்க அப்பா அம்மாவோட போறேன் ஆமா பொண்ணு வீடு எங்க இருக்கு”
”எதுக்கு கேட்கற”
”தெரிஞ்சாதானே பொண்ணு வீட்டுக்குப் போறதுக்கு”
”நாளைக்கு நானும் என் தம்பிகளும் உன் வீட்டுக்கு வரோம், நாம எல்லாருமா சேர்ந்து பொண்ணு வீட்டுக்கு போலாம்”
”ஓ அப்படியா சரி சரி அப்புறம்”
”என்ன”
”இல்லை பொண்ணு போட்டோ கிடைக்குமா” என ஆசையாக ஜீவா கேட்க
“ஏன் எதுக்கு என்ன விசயம் ஏதாவது பிரச்சனையா, யாராவது ஏதாவது சொன்னாங்களா”
”சே சே இல்லை சும்மா பார்க்கலாம்னு தோணிச்சி அதான் கேட்டேன் அதுக்கு ஏன் நீ இவ்ளோ பதட்டப்படற”
”ஓ அப்படியா எதுக்கு போட்டோலாம் நாளைக்கு நேர்லயே பார்க்கப் போற அப்புறம் என்ன”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.