அவன் டைப் செய்யும் போது பல புது மெசெஜஸ்க்கான நோடிபிகேஷன் வந்தது.
அதில் ஸ்ரீகர் அனுப்பி இருந்த “கங்க்ராட்ஸ்” எனும் மெசேஜ் ஒன்று அவனின் கவனத்தை ஈர்த்தது.
அவனுடைய டீம் பைனல் ரவுண்டிற்கு செலக்ட் ஆனதற்காக அனுப்பி இருப்பான் என்று யோசித்துக் கொண்டான். இருந்தாலும் மனசுக்குள் எதிர்பார்ப்பும், ஆவலும் அதிகமாக, படபடக்கும் இதயத்துடன் கான்டஸ்ட் பேஜை பிரவுசரில் திறந்தான்.
பெரிய கொட்டை எழுத்துக்களில் வின்னர்ஸ் டீம் அக்ஷயா என்ற எழுத்துக்கள் இருந்தது.
ஆதித்யாவிற்குள் சந்தோஷம் குமிழிட்டது. அவனின் ப்ராஜக்ட், அவனுடைய ஐடியா ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. அதுவும் ஜக்ருதியின் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.
அவர்கள் டீம் ஜெயித்திருக்கிறது என்றால் ஜக்ருதியை சந்திக்கலாம், நேரடியாக சந்திக்கலாம்!
ஒரே வினாடியில் இத்தனை எண்ணங்களும் அலை மோத, “சான்வி, எங்க டீம் ஜெயிச்சிருச்சு. ஜெயிச்சிருச்சு!” எனக் கத்திக் கொண்டே எழுந்து நின்று மகிழ்ச்சியில் குதித்தான் ஆதித்யா.
சான்விக்கு அவன் சொன்னது தெளிவாக புரியவில்லை. அவன் கையில் இருந்த போனை பிடுங்கிப் பார்த்தாள். அங்கே ஆதித்யா பார்த்த செய்தி அவள் கண்ணிலும் பட்டது.
ஆதித்யா நியூயார்க் சென்ற நாளில் இருந்து அவளும் அந்த பக்கத்தை பார்த்துக் கொண்டே தான் இருந்தாள். ஆதித்யா கோபித்துக் கிளம்பி வந்து விட்டான் என ஹரிணி மூலமாக அறிந்துக் கொண்டிருந்தாள் சான்வி. அதனால் ஆதித்யா டீம் பைனலுக்கு போகவில்லை என்ற முடிவிற்கு சான்வி வந்திருந்தாள். எனவே அதற்கு பிறகு அவள் காண்டஸ்ட் பேஜை திறக்கவே இல்லை.
இப்போது தம்பியின் டீம் முதல் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதற்கு சந்தோஷம்