(Reading time: 7 - 14 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

அடைந்தாலும், முழு விபரம் தெரிந்துக் கொள்ள வின்னர்ஸ் மெசேஜூடன் இருந்த லின்க்கை தட்டினாள். அந்த புது பக்கத்தில் அக்ஷரா மைக் பிடித்து பேசும் போட்டோ இருந்தது. அக்ஷரா முகத்தில் சந்தோஷத்திற்கான அறிகுறி ஒன்றுமே இல்லை. கண்கள் சுருங்கி, சோர்வும் அயர்வுமாக தெரிந்தாள்.

  

“நீ முதல்ல அக்ஷரா கிட்டப் பேசு ஆதி!” என தம்பியை பார்த்து சொன்னாள் சான்வி.

  

சந்தோஷத்தில் தன்னை மறந்திருந்த ஆதித்யாவிற்கு அப்போது தான் அக்ஷரா நினைவே வந்தது. அது மட்டும் அல்லாது அவன் போட்டியின் நடுவே கிளம்பி வந்ததும் நினைவு வந்தது.

  

அக்ஷரா மட்டும் தனியாக அவர்களின் ப்ராஜக்ட்டை பற்றிப் பேசினாளா? அவளுக்கு அந்த அளவிற்கு அவனின் ப்ராஜக்ட் பற்றி தெரிந்திருக்குமா? எல்லா கேள்விகளுக்கும் எப்படி பதில் சொல்லி இருப்பாள்???

  

அக்ஷரா மீதிருந்த கோபம் எல்லாம் மாறி, அவள் மீது ஆதியாவிற்கு மரியாதை ஏற்பட்டது.

  

அக்காவிடம் இருந்துப் போனை வாங்கி அக்ஷ்ராவின் நம்பரை வாட்ஸ்அப்பில் டையல் செய்தான். ரிங் ஆனதே தவிர அக்ஷரா போனை எடுத்துப் பேசவில்லை.

  

மூன்று முறை அழைத்துப் பார்த்து விட்டு, “இப்போ தான் ரிசல்ட் பார்த்தேன் அக்ஷரா. என்னால நம்பவே முடியலை. யூ டிட் இட். எல்லா க்ரெடிட்டும் உனக்கு தான்” என புதிதாக மெசேஜ் அனுப்பினான்.

  

மெசேஜ் பக்கத்தில் உடனடியாக தோன்றிய இரண்டு ப்ளூ டிக் மார்க்குகள் அக்ஷரா மெசேஜை படித்து விட்டதை அவனுக்கு உணர்த்தியது. ஆனால், அவள் பதில் அனுப்பவில்லை.

  

ஆதித்யா அதற்காக வருத்தப் பட்டுக் கொண்டிருக்காமல் மீண்டும் அழைத்தான். மீண்டும், மீண்டும், மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தான். அக்ஷரா ஒரு முறையும் போனை எடுக்கவில்லை. மெசேஜும் அனுப்பவில்லை!

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.