கூட காலையிலே வரும் போது அத்தை பாவம் தனியா உங்களை கஷ்டப் பட்டு வளர்த்திருக்காங்கன்னு சொன்னால் சொல்றாரு, ஆமாம் அண்ணி, பணம் இல்லைன்னால் கஷ்டம்ன்னு... ஹ்ஹ்ஹுஊம்... சரி, கல்யாணம் ஆனால் தானா பொறுப்பு வந்திரும்னு வச்சுப்போம்... ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..."
"அது என்ன அக்கா சிக்கல்?" என்றாள் வீணா!
"மாமாக்கு அப்புறம் அத்தைக்கு துணையா நின்னு எல்லாம் செஞ்சது அவங்க தம்பி தான். அதனால் அத்தை, அவங்க தம்பிப் பொண்ணு கண்மணியை தான் சஞ்சீவ் கல்யாணம் பண்ணிக்கனும்னு அடம் பிடிக்குறாங்க. சஞ்சீவ் மாட்டேன்னு அடம் பிடிக்குறார்.."
"நல்ல வேளை... பரவாயில்லை... இந்து, பார் சஞ்சீவுக்கு கண்மணியைப் பிடிக்காதாம்...!!!"
"பிடிக்காதுன்னு இல்லை... சஞ்சீவைப் பொறுத்த வரை கண்மணியும் அவருக்கு ஒரு சிஸ்டர் மாதிரி..."
"கரெக்ட் தான் அக்கா... இந்த மாதிரி அத்தை பையன், மாமா பொண்ணு எல்லாம் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தானே சொல்றாங்க.." என்ற வீணா, இந்துவைப் பார்த்து,
"என்ன இந்து, இவ்வளவு டிடைல்ஸ் போதுமா இன்னும் ஏதாவது தெரியனுமா?" என்றாள் கேலி புன்னகையுடன்!
"வீணா, நீ என்கிட்டே இருந்து அடி வாங்கப் போற... நான் யாரைப் பத்தியும் கேக்கலை..." என்றாள் இந்து எரிச்சலுடன்!
"ஓஹோ!!! அப்போ ஏன் டல்லா இருந்தீங்க, மேடம்? வேற எதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தீங்க??"
என்ன சொல்லி சமாளிப்பது என்று சில வினாடிகள் யோசித்து விட்டு... எப்போதும் கை கொடுக்கும் விஷயத்தையே சொன்னாள் இந்து.