"ஓஹோ... நீ அக்காவுக்காக தான் யோசிக்கிறீயா? அப்போ நிஜமாகவே உனக்கு இன்டிரெஸ்ட் இருக்கு தானே?" என்றாள் வீணா கிண்டலாக.
"ஹே வீணா... இந்துவை ரொம்ப ஓட்டாதே... அப்புறம் அவளுக்கு நிஜமாகவே இன்டிரெஸ்ட் இருந்தாலும் போயிடப் போகுது... இன்னைக்குத் தானே இந்துவும் சஞ்சீவும் முதல் முறையா மீட் பண்ணி இருக்காங்க... இன்னும் கொஞ்சம் நாள்ல ஏதாவது இருந்தா தானா தெரியப் போகுது..."
"அதுவும் சரி தான் அக்கா... போனாப் போகுது பொழைச்சுப் போ..." என்றாள் வீணா இந்துவைப் பார்த்து.
"எனக்கு இப்போ தான் தெரியுது அவினாஷ் ஏன் காலையிலே சீக்கிரம் போயிட்டு சாயந்திரம் ரொம்ப லேட்டா வர்றாருன்னு... உன்னுடைய இம்சை தாங்க முடியாமல் தான்!!!"
"ஹலோ நானும் பார்க்க தானே போறேன்... இப்போ ஆஃபீஸ் போகாமல் ஓ பி (OP) அடிக்குற சஞ்சீவ், கல்யாணத்துக்கு அப்புறம் 24 மணி நேரமும் அங்கேயே கதின்னு இருக்கப் போறார்..."
"எந்த குரங்கு எங்கே போனால் எனக்கு என்ன..."
இந்து சொல்லி முடித்த உடன் மூன்று பேரும் சேர்ந்து சிரித்தார்கள்!!!
"அத்தைக்கு மட்டும் தெரியனும் நீ சஞ்சீவை குரங்குன்னு சொன்னது... அவ்வளவு தான்..." என்றாள் கீதா.
"சரி அக்கா, அதெல்லாம் இருக்கட்டும் வீட்டுக்கு கிளம்பலாமா? நான் அம்மாகிட்ட 5 மணிக்கு வந்துருவேன்னு சொல்லிட்டு வந்தேன். இப்போவே மணி 5 ஆச்சு.”
"ஆமாம் கிளம்பலாம். நானும் சீக்கிரம் வரேன்னு அத்தைக்கிட்ட சொல்லிட்டு வந்தேன்."
தோழிகள் தங்கள் அரட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்து கிளம்ப ஆயத்தமானார்கள்!
தொடரும்...