(Reading time: 6 - 11 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

03. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

ஹாலில் அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி, தோழிகள் மூவரும் வருவதைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

  

"நீங்க மூணுப் பேரும் என்னைக்கும் இப்படியே நட்போட இருக்கணும்.... உங்களைப் பார்க்கும் போது தான் வாழ்க்கையில நான் எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கேன்னு தோணுது...!"

  

"அதனால என்ன ஆன்ட்டி, உங்களையும் நாங்க ஃபிரெண்டா சேர்த்துக்கிறோம். எந்த மாமியார், மருமகள் தன் ஃபிரெண்ட்ஸோட அரட்டை அடிக்க உங்களை மாதிரி அலோ பண்றாங்க? நீங்க சூப்பர் மாமியார் ஆன்ட்டி!!!" என்றாள் இந்து.

  

"அதெல்லாம் இருக்கட்டும், நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப் போற? அடுத்த தலைமுறையிலையும் உங்க நட்பு தொடரனும் தானே? நீ சீக்கிரமா கல்யாணம் செய்துக்கலைனா எப்படி எல்லாம் சரியா இருக்கும்???"

  

"நல்ல பாயிண்ட் தான், ஆன்ட்டி... யாரும் என்கிட்டே இது வரைக்கும் சொல்லாத பாயிண்ட்... கட்டாயம் யோசிக்கிறேன்...." என்றாள் இந்து புன்னகையுடன்!

  

தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மகளை எட்டிப் பார்த்து விட்டு வந்த வீணா, வீட்டின் வெளியில் கார் இல்லாததைக் கவனித்து யோசனையுடன் உள்ளே வந்தாள்.

  

"அத்தை, நம்ம கார் எங்கே?"

  

"இப்போ தாம்மா அவினாஷ் போன் பண்ணினான்னு டிரைவர் வண்டியை எடுத்துட்டு போனான்..."

  

"ஐயோ, அப்போ இவங்க ரெண்டுப் பேரும் எப்படி போவாங்க... அவரை..."

  

வீணாவும் லக்ஷ்மியும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த இந்து, குறுக்கிட்டு,

  

"பரவாயில்லை, வீணா, பிரச்சனை இல்லை... நான் என்னோட காரை எடுத்துட்டு வர

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.