தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 18 - பிந்து வினோத்
18. இன்று உன்னைப் பார்த்தவுடன்...
மாலை ஆறு மணி அளவில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய ரமேஷ், நேராக இரவு நேரத்திற்கான சமையலில் ஈடுப் பட்டிருந்த மனைவியைத் தேடி கிச்சனுக்குச் சென்றான்.
"பவி, ஃபாஸ்டா செய்ற மாதிரி ஏதாவது ஸ்வீட் இருந்தால் கொஞ்சம் செய்யேன்..." என்றான் ரமேஷ்.
"ப்ச்... என்னங்க நீங்க... நானே எப்போடா இந்த வேலை முடியும்னு சலிப்புல இருக்கேன்... இப்போ வந்து ஸ்வீட் அது இதுன்னு... நாளைக்கு செஞ்சு தரேன் ப்ளீஸ்..." என்றாள் பவித்ரா அலுப்புடன்!
"நோ பவி... இன்னைக்கு தான் ஸ்பெஷல்.... இப்போ ஸ்வீட் செய்யலைனா என்னை விட நீ தான் அப்புறம் ரொம்ப ஃபீல் செய்வ..."
"ஏன்?" கேள்வியை விட எரிச்சல் அவளின் கேள்வியில் நிறைந்திருந்தது!
மனைவியின் குரல் மாற்றம் புரிந்து சிரித்த ரமேஷ்,
"சஸ்பென்ஸ்...." என்றான் உற்சாகத்துடன்!
"ப்ளீஸ் ரமேஷ்...."
பவித்ரா பேசி முடிக்கும் முன் குறுக்கிட்ட ரமேஷ்,
"பவி செல்லம், ஒரே ஒரு நாள் நான் சொல்றதைக் கேளேன்... யூ வில் நாட் பீ டிஸ்ஸப்பாயிண்ட்டட் பீலீவ் மீ..." என்றான்
பவித்ரா எதுவும் சொல்லாது கணவனைப் பார்த்து கோபமாய் முறைத்தாள்.
"முறைப்பு எல்லாம் சரி.... இந்த ஸ்வீட் செய்வதற்கு நீ ரொம்ப சந்தோஷப் பட போற... இந்த முறைப்புக்கு எல்லாம் சேர்த்து இன்னைக்கு வட்டியோட வசூல் செய்றேனா இல்லையா