கண்ணடித்தான் ரமேஷ்.
கணவனை செல்லமாக முறைத்து விட்டு,
"சாப்பிடற நேரம்... இருந்தாலும் முதல்ல கொஞ்சமா ஸ்வீட் சாப்பிடுங்க, அப்புறம் டின்னர் முடிச்சிட்டு நிறைய சாப்பிடலாம்..." என்றபடி அனைவருக்கும் ஒரு ட்ரேயில் சின்ன தட்டுகளில் கேசரியை எடுத்து வந்தாள் பவித்ரா.
கேசரியை ருசி பார்த்து விட்டு பவித்ராவை பாராட்டிய விவேக், பிகு எல்லாம் செய்யாமல் அவர்கள் வீட்டிலேயே அன்று இரவு உணவையும் உண்டான். அங்கு தங்கி இருந்த சில மணி நேரத்தில் கமலா, ரமேஷ் மட்டும் அல்லாது நித்திலாவையும் ஃப்ரெண்டாக்கி கொண்டான். அவனின் வித்தியாசம் பாராட்டாத நடத்தையும், பேச்சும், சிரிப்பும் அனைவரையும் கவர்ந்தது.
பவித்ராவிற்கும் அவன் பாரதிக்கு சரியான ஜோடி என்று தான் தோன்றியது ஆனால் ஏதோ ஒன்று உறுத்தியது. ஏதோ ஒன்று என்ன, அவனை முதல் நாள் கண்டதற்கும் இன்று பார்பதற்கும் இருக்கும் வேறுபாடு தான் மனதை உறுத்தியது. அன்றைய கோபம் என்ன? இன்றைய கலகலப்பு என்ன? எது இவனின் நிஜ குணம்?
தொடரும்...