(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"அம்மா இவர் பெயர் விவேக்... நிறைய துணிக் கடை வச்சிருக்காரே நரேந்திரன், அவருடைய இரண்டாவது மகன்..." என்று சொல்லி விவேக்கை தன் அம்மாவிற்கும் அறிமுகப்படுத்தினான்.

  

ரமேஷ் எதிர்பார்த்தது போலவே, பவித்ரா அந்த சில வினாடிகளில் திகைப்பு மாறி இயல்புக்கு திரும்பி இருந்தாள்.

  

"வாங்க, விவேக் சார். நீங்க எங்க வீட்டுக்கு வந்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க அண்ணா, அண்ணி, அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?" என்று விவேக்கை வரவேற்று, உபசரிக்கவும் செய்தாள் பவித்ரா!

  

"எல்லோரும் ரொம்ப நல்லா இருக்காங்க... நீங்களும் இப்படி உட்காருங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... அம்மா நீங்களும் உட்காருங்க..." என்றான் விவேக்.

  

"நீங்க பேசுங்க சார், நான் இதோ வரேன்.... அத்தை நீங்க உட்காருங்க..." என்றப் படி சமையலறை பக்கம் செல்ல திரும்பினாள் பவித்ரா.

  

"இல்லை சிஸ்டர் இருங்க... முதலில் பேசுவோம். அப்புறம் நீங்க எனக்காக ரெடி செய்யும் எதையும் வாங்கிக்குறேன்..." என்று அவளைடத் தடுத்தான் விவேக்.

  

பவித்ரா கேள்வியாய் ரமேஷை பார்த்தாள். அதற்குள் கமலா பேசினாள்.

  

"பவித்ரா, தம்பி தான் சொல்றார்ல, உட்கார்ந்துப் பேசு... ஒரு டம்பளர் தண்ணி மட்டும் இப்போ குடு... அவர் பேசி முடிச்ச பின், சாப்பாடே சாப்பிடுவார்..."

  

"கட்டாயம் அம்மா, நான் ரெடி தான்..." என்றான் விவேக்.

  

மற்றவர்கள் சிரிக்க, பவித்ரா புன்னகையோடு சென்று தண்ணீர் எடுத்து வந்து அவனுக்கு கொடுத்தாள். வாங்கிக் கொண்டு,

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.