சொல்றேன்..." என்றாள்.
"ஆனாலும் அண்ணா நகர்ல இருந்து இங்க வர கொஞ்ச நேரமாகுமே..."
"கரக்ட் தான்... வேற என்ன செய்றது... நான் அம்மா கிட்ட சொல்லிடறேன்... கீதா அக்காவை நான் ட்ராப் பண்ணிட்டு, நான் வீட்டுக்குப் போறேன்..."
சொன்னதை செய்ய தன் செல் போனை தேடினாள் இந்து. அப்போது தான் காஞ்சனாவிடம் தன் மொபைலில் பேசி இருந்ததால் தன் போனை கையில் வைத்து இருந்த கீதா,
"போனையா தேடுற, இந்து? இந்தா இதுலப் பேசு... அப்புறமா உன் போனைத் தேடலாம்..." என்று சொல்லி தன் மொபைலை இந்துவிடம் கொடுத்தாள்.
கீதாவின் போனை வாங்கி தன் அம்மா அர்ச்சனாவிடம் பேசி, காரை வீணாவின் வீட்டிற்கு அனுப்ப சொன்னாள் இந்து. அவள் அழைப்பை கட் செய்தப் போது, கீதாவின் போன் புது அழைப்பு வந்திருப்பதன் அறிகுறியாக ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசிவிட்டு கீதாவிடம் கொடுக்கலாம் என்றெண்ணி போனை பார்த்த இந்து, டிஸ்ப்ளேவில் அழைப்பவரின் பெயர் சஞ்சீவ் என தெரியவும் சிறிது தயங்கினாள்... சஞ்சீவின் அழைப்பை ஏற்று பேச மனம் வராது,
"கீதா அக்கா உங்களுக்குப் போன்...." என்று ரோஷினியிடம் விளையாடிக் கொண்டிருந்த கீதாவை அழைத்தாள்.
"யார் இந்து? என்னன்னு கேளேன்... இதோ வரேன்..."
"இல்லை அக்கா நீங்களே பேசுங்க..."
அதற்குள் போன் அமைதியாகிப் போனது! கீதாவும் வீணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வீணா கிண்டலாக,