சொல்லி, டவேராவை எடுக்க சொன்னான். மற்றவரின் முகத்தில் கேள்வியை பார்த்து, கண் சிமிட்டினான் விவேக்.
நரேந்திரன் மட்டும் ஏதோ கான்பெரென்ஸ் இருப்பதால் அலுவலகம் சென்று விடவும், மற்றவர்கள் அனைவரும் அவனுடன் கிளம்பினர். கலகலப்பான அந்த குடும்பம் பேசிய படி வந்தனர். கிழக்கு கடற்கரை சாலை அருகில் வந்த போது, விவேக்கின் செல் போன் சிணுங்கியது. எடுத்து பார்த்து விட்டு வைத்தவன், அவனின் அருகில் அமர்ந்திருந்த கற்பகத்திடம்,
"டிராமா ஆல் செட் டு பிகின் அம்மா..." என்றான்.
சொல்லியபடி, அங்கே ஓரமாக நின்றிருந்த காரை தாண்டி அவர்கள் செல்லவும்,
"கண்ணா, காரை அப்படியே ரிவர்சில் அந்த கார் பக்கம் விடு... " என்று டிரைவரிடம் சொன்னான்.
சொன்னது போல் ரிவர்ஸ் எடுத்து பின்னால் வந்தவர்கள், அங்கே கார் அருகில் நின்றிருந்தவர்களை பார்த்து,
"அட, என்ன ஆச்சு, இங்கே நிற்க்குறீங்க?" என்றான்.
அப்போது தான் அங்கே இருந்த பாரதி மற்றும் பவித்ராவை கவனித்த மது,
"மேடம், என்ன ஆச்சு கார் ரிப்பேரா?" என கேட்ட படி கிழே இறங்கினாள்.
அவளை தொடர்ந்து நிரஞ்சனும் இறங்கினான்.
கற்பகமும், உமாவும், ஆர்வத்துடன் வெளியே பார்ப்பதை கவனித்து விட்டு,
"அம்மா, அங்கே கல்யாணமாகாத ஒரே ஒரு பொண்ணு தானே இருக்கா, அவள் தான் நம்ம ஆள்..." என்றான், பின்,