பாரதி. மதுவும் அவள் பின்னே சென்றாள்.
அவள் அந்த பக்கம் செல்லவும்,
"எதுக்கு அவசரமா போறாங்க தெரியுமா? பிரெண்ட் கிட்ட இந்த காரில் வேண்டாம்ன்னு சொல்ல...." என்றாள் உமா, கற்பகத்திடம்.
"ம்ம்..."
"ஆனால் மதுவும் கூடவே இருக்காளே, கஷ்டம் தான்..."
பாரதியை பார்த்தபடி பேசி புன்னகைத்த உமாவை பார்த்த கற்பகம்,
"எனக்கு ஒன்னும் புரியலை... ஏன் இப்படி எல்லோரும் அவள் புகழ் பாடுறீங்க?"
"அத்தை, எனக்கு தெரிஞ்ச விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாது... நான் சொல்லவும் முடியாது... பாரதி கிட்ட விவேக் சொன்னதை எல்லாம் மறந்து, பொதுவா பேசி பாருங்களேன்.... ரொம்ப நல்ல டைப் அத்தை... பணம் ஒன்னு தான் கொஞ்சம்..."
"சேச்சே உமா, நான் பணம் அந்தஸ்த்து எல்லாம் காரணமா சொல்லலை... சரி நீங்க எல்லோரும் இவ்வளவு சொல்லும் போது நான் பேசாமல் இருப்பேனா? பேசி பார்த்தால் போச்சு... நேரா பாரதி கிட்டேயே விவேக் பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்க போறேன்..."
"அச்சச்சோ... வேற வினையே வேண்டாம்... உங்களுக்கு முழுசா சொல்லலை... ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோங்க. விவேக் ஒரு தடவை பாரதி கிட்ட கல்யாணம் பத்தி பேசி அவங்க நோ சொல்லிட்டாங்க... "
"என்ன????"
"உண்மை அத்தை... இதுக்கு மேல இதை பத்தி என்கிட்டே கேட்காதீங்க..." என்றாள் உமா.