ஸ்ரேயான்ஷின் பார்வை புரிந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல், ஹாஸ்பிட்டலில் நடந்ததை அவனிடம் விவரித்தாள் ரச்னா...
“ப்ச்... ரச்னா... ப்ளீஸ்... டோன்ட் கோ சோ லோ...”
ஸ்ரேயான்ஷ் இப்போது ஏன் இப்படி சொல்கிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள் ரச்னா...
“சீ ரச்னா... ஐ நோ யுவர் ப்ளான்... உனக்கு என்னோட அட்டென்ஷன் வேணும்.. அதுக்காக நீ இப்படி எல்லாம செய்றன்னு எனக்கு தெரியும்... பட் அதுக்கு இப்படி ஒரு ரீசனா கிடைச்சது???”
ரச்னாவிற்கு முதலில் ஸ்ரேயான்ஷ் என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை...
தாமதமாகவே அவன் அவளும் தீபாவும் பேசி வைத்திருந்த திட்டத்தை பற்றி சொல்கிறான் என்று புரிந்தது...
அவனுக்கு எப்படி அது தெரிந்தது... என்ற கேள்வியை விட, அவன் அவளிடம் பேசிய விதமும், அந்த கேள்வியும் அவளை பெரிதாக பாதித்திருக்க,
“ஸ்ரீ... என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா??? .குழந்தை விஷயத்துல நான் பொய் சொல்வேன்னு நீங்க நினைக்குறீங்களா ஸ்ரீ?" என்று வருத்ததுடன் கேட்டாள் ரச்னா...
"வேற யாரும் சொல்ல மாட்டாங்க தான்... ஆனால் நீ சொல்வ... ஏன்னா நீ 100% சுயநலவாதி!" என்றான் ஸ்ரேயான்ஷ் கடுப்புடன்...
அவள் இருந்த மனநிலையில் என்ன சொல்வது என்று புரியாமல் ரச்னா நிற்க,
“புரிஞ்சுக்கவே மாட்டேங்குற ரச்னா... எனக்கு ஆபிஸ்ல அத்தனை பிரச்சனை... தலை போற பிரச்சனை.. இன்னைக்கு நடந்த கிளையன்ட் விசிட் ஃப்ளாப்... டெமோ வோர்க்கே ஆகலை... ரொம்ப அசிங்கமா போச்சு... இன்னொரு தடவை இப்படி ஏதாவது நடந்தா நம்ம கம்பெனியைஏ
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.