கொடைக்கானல் கெஸ்ட் அவுசில் அங்கிதாவின் அறையில்
”நீங்க ரொம்ப மோசம்” என சிணுங்கினாள் அங்கிதா.
தன் தாவணியை எடுத்துக் கொண்ட ஜெகவீரனிடமிருந்து அதை பிடுங்கிக் கொண்டிருந்தாள். அவனோ அநாயசமாக படுத்துக் கொண்டு ஒரு கையில் அவளது தாவணியை பிடித்திருந்தான்
”விடுங்க”
“முடியாது“
“நான் கத்துவேன்”
“கத்து” என அவன் சொல்ல அவள் அமைதியானாள்
”ம்க்கும் விடுங்க”
“ஷ் முடியாது இப்படியே இரு நல்லாதான் இருக்கு”
”எனக்கு கூச்சமா இருக்கு”
“ஏண்டி அரை மணி நேரமா நான் உனக்கு முத்தம் கொடுத்தேன், அப்ப வராத கூச்சம் இப்ப வருதா உனக்கு” என சொல்ல வெட்கப்பட்டு அமைதியாக தலை குனிந்தவள் சட்டென அவனைப் பார்த்து
“நான் கூட பயந்தேன் நீங்க பண்றதை நினைச்சி எங்க என்னை நீங்க கர்ப்பமாக்கிடுவீங்களோன்னு பயந்துட்டேன்”
“நான் ஆம்பளைடி கல்யாணம் ஆகாம ஒரு பொண்ணோட தப்பான உறவை வெச்சிக்கவே மாட்டேன். அதோட நான் கிராமத்துக்காரன், என் ஊருக்கு நான் கட்டுப்பட்டவன், என் அம்மா
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.