This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
சுந்தரி பார்ட்டி நடக்கும் ஹாலை படபடப்புடன் பார்த்தாள்.
ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என்று கலவையாக நூறுக்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள்.
இனியவன் வாங்கி வந்த மாடர்ன் உடையை வைத்து சுந்தரி என்னவோ நினைத்திருந்தாள். அங்கே எல்லாமே தலைக்கீழாக இருந்தது.
ஆண்கள் அனைவருமே இனியவன் போல கோட் சூட் அணிந்திருந்தார்கள். பெண்கள் சுரிதார், மேற்கத்திய உடை, நவீன பாணி சேலை அணிந்திருந்தார்கள்.
இனியவனுடைய “ஸ்பெஷல்” உடையை வைத்து அவள் எதிர்பார்த்த அல்ட்ரா மாடர்னாக யாரும் இல்லை!!!
அவன் ஏன் அவள் அந்த உடையில் வந்தால் எல்லோரும் வாயைப் பிளந்து பார்ப்பார்கள் என்று சொன்னான் என்பது தெளிவாகப் புரிந்தது. அவள் மட்டும் வேறு வழி இல்லாமல் அந்த கட் உடையை அணிந்து வந்திருந்தால் அவள் மட்டும் தனியாக தெரிந்திருப்பாள். எல்லோரும் வாயைப் பிளக்காமல் வேறு எப்படி பார்த்திருப்பார்கள்!
சுந்தரி பக்கத்தில் இருந்த இனியவன் அவளை சுற்றி கையைப் போட்டு தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
அவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவே அவன் அப்படி செய்தது சுந்தரிக்கு என்னவோ போல இருந்தது. அவனின் கையை தள்ளி விட முயன்றாள். இனியவன் கையை அசைக்கவில்லை.
“கையை எடுங்க. ஏன் இப்படி செய்றீங்க?” – அடிக்குரலில் சொன்ன சுந்தரி கணவனைப் பார்த்தாள். திகைத்துப் போனாள்.
இனியவன் வியப்பு நிறைந்த கண்களுடன் அவளை ஆராய்வதுப் போல பார்த்துக் கொண்டிருந்தான்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.