This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“நவ்யா என்ன மாதிரி செம்ம பிகர்ல சுந்தரி. யாரு தெரியுமா? மிஸ் இந்தியா. என் டைரக்டர் என்னை நவ்யாக்கு ஸ்பெஷலா ஹெல்ப் செய்ய சொல்லி இருக்கார். நீ அங்கே இருந்தவங்களை பார்த்திருக்கனுமே. ஒவ்வொருத்தன் காதுல இருந்தும் புகை புகையா வந்துட்டு இருந்துச்சு. பொறாமையில வெந்துப் போயிட்டாங்க.”
இனியவன் சுந்தரியை ரகசியமாக பார்த்தான். அவள் இப்போதும் போட்டோவை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முக பாவனையை வைத்து அவள் காதில் இருந்தும் டன் கணக்கில் புகை வருவது அவனுக்குத் தெரிந்தது.
“என்ன சுந்தரி போட்டோவையே பார்த்துட்டு இருக்க?” – இனியவன் பேச்சில் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது.
“வேற ஒன்னுமில்லை, இவப் போய் எப்படி மிஸ் இந்தியா ஆனான்னு பார்க்குறேன்” – சுந்தரியின் பதிலில் இப்போது பொறாமை எட்டிப் பார்த்தது.
என்னையா கேலி செய்தாய், இரு இரு உன்னை நவ்யா வைத்தே டாக்கில் செய்கிறேன் என்று கருவிக் கொண்டான் இனியவன்.
வேண்டுமென்றே நவ்யாவை புகழ்ந்து பேசிக் கொண்டே வந்தான். வீட்டுக்கு வந்து சேர்ந்தப் போது சுந்தரியின் முகம் இறுகிப் போயிருந்தது.
“ஹோய் மின்னல் மழை மோகினி எதுக்கு மூஞ்சியை இப்படி வச்சிருக்க?” – இனியவன்
“நான் எப்போவும் போல தான் இருக்கேன்” – சுந்தரி
“ஹையோ இந்த உர்ர் மூஞ்சி பொண்ணையா நான் கல்யானம செய்துக்கிட்டேன்? நைட் தண்ணி சொட்ட வந்த நின்ன ஜோர்ல சரியா பார்க்காம கல்யாணம் செய்துக்கிட்டேன் போலருக்கே”
சுந்தரி வாயை மூடிக் கொண்டிருந்தாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.