அம்மாவிற்கு பிடித்ததாக அமெரிக்காவில் எதுவும் இருக்காது என்று தோன்றியதால் எதுவும் வாங்க வில்லை, ஏதேனும் வாங்க வேண்டுமா என்று கேட்கவும் கூட அவனுக்குத் தோன்றவில்லை.
சஞ்சீவின் முகத்தைப் பார்த்தே இந்து பதிலை தெரிந்துக் கொண்டாள்.
"நான் ஒன்னு சொல்லட்டுமா சஞ்சீவ்... உங்க அம்மாக்கு படிப்பு கம்மியா இருக்கலாம். ஆனால், அவங்க ரொம்ப புத்திசாலி. அதனால உங்க அம்மாவோட ஆசிர்வாதத்தோட ஃபிரெஷ்ஷா உங்களோட இந்த ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் பிசினஸ நடத்துங்க... எல்லாம் நல்லப் படியா நடக்கும்."
"கட்டாயம் இந்து... என்னவோ இதெல்லாம் எனக்கு இவ்வளவு நாள் தோணவே இல்லை... ரொம்ப தேங்க்ஸ் இந்து..."
"தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு! சரி, நம்ம காஃபியை குடிப்போம்..." என்ற இந்து தங்கள் ஆர்டரை எடுத்து வருமாறு சைகை செய்தாள்.
இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். அங்கே தமிழ் பாடல் மெல்லியதாக பாடிக் கொண்டிருந்தது.
முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேன்
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
பாடலின் வரிகளை கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சீவ்,
"அடடா இது என்ன புது குழப்பம்!" என்றான்.
"எனன விஷயம்?"