(Reading time: 7 - 14 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அமைதியாக இருவரும் அதை எடுத்து அருந்தினார்கள்.

  

"ஹாய் இந்து.." என்ற புதியக் குரலில் இருவரும் நிமிர்ந்தார்கள்.

  

பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்த இரு இளைஞர்களில் ஒருவன் தான் இந்துவை அழைத்தது என்பது புரிந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று சஞ்சீவின் மனம் யோசனையில் ஆழ்ந்தது.

  

இந்துவிற்கு அதுப் போன்ற யோசனை எதுவும் இல்லாததால், அவள் அவனைப் பார்த்து,

  

"ஹாய் பிரசாத்! எனன இந்த பக்கம்...?" என்றாள்

  

சஞ்சீவின் மூளையில் மின்னல் வெட்டியது. காலையில் அண்ணன் சொன்ன அதே பிரசாத் தான் இவன்.

  

பிரசாத்தும், அவன் உடன் இருந்தவனும் இப்போது எழுந்து இவர்களின் அருகில் வந்தனர்.

  

"எனன இந்து இது கேள்வி... நான் தான் உங்களை கேட்கணும்.. எப்போ கேட்டாலும் ஆஃபீஸ் நேரத்தில வெளிய வர மாட்டேன்னு சொல்லுவீங்க.. என்ன இன்னைக்கு இங்க? சரி அதெல்லாம் இருக்கட்டும்.. ஹொவ் ஆர் யு?" என்ற பிரசாத் இயல்பாய் இந்துவின் பக்கமாக கையை நீட்டினான்.

  

"எனக்கு எனன குறைச்சல் நான் நல்லா இருக்கேன்" என்றவாறு அவன் கைகளை எந்த வித மாற்றமும் இல்லாது சகஜமாய் பற்றிக் குலுக்கினாள் இந்து.

  

"இவர் திலீப், என்னோட கசின்..." என தன் அருகே இருந்த இளைஞனை அவளுக்கு அறிமுகம் செய்தான் பிரசாத்.

  

"ஹலோ!" என்றவாறு அவனின் கைகளை குலுக்கிய இந்து, ஏதோ தோன்ற சஞ்சீவை திரும்பிப் பார்த்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.