கொண்டிருந்தாள்.
விவேக்கின் பார்வையின் காரணமாக அவளையும் மீறி அவளின் கன்னங்கள் சிவந்தன. தன்னை சமாளிக்க முயன்றப்படி விவேக்கைப் பார்த்து பெரிதாக புன்னகைப் புரிந்தாள்.
பாரதியின் சின்ன புன்னகையிலேயே மயங்கி நின்ற விவேக், அவளின் வெட்கச் சிரிப்பில் மதி மயங்கி தான் போனான்! அவன் அருகே அவள் வந்த ஒரு சில வினாடிகளுக்கு பின்னும் விவேக் எதுவும் சொல்லாதிருக்கவும்,
"ஹலோ..." என்று கைகளை அவன் முகத்தின் முன் ஆட்டினாள் பாரதி.
ஒரு வழியாக பூலோகத்திற்கு வந்து சேர்ந்த விவேக், மீண்டும் ஒரு முறை பாரதியின் முகத்தை பார்த்து விட்டு தான் பேச்சை துவக்கினான்.
"பாரதி, மிஸ் யூனிவேர்ஸ் என்ன, யாருமே உன் பக்கத்தில் கூட வர முடியாது!"
"ஆனால் தூரமாக வரலாமோ?"
கோபப்படாமல், முறைக்காமல் பாரதி கிண்டலாக பதில் சொல்லவும், முதலில் ஆச்சர்யப்பட்ட விவேக், அதை மறைத்து சிரித்தான்.
இருவரும் ஒன்றாக ஹாஸ்டலில் இருந்து கிளம்பினார்கள்.
அவளுக்காக கார் கதவை விவேக் திறந்து விடவும், பிகு எதுவும் செய்யாது ஏறி அமர்ந்தாள் பாரதி. அவனும் அமர்ந்து காரை கிளப்பினான்.
அவள் பக்கம் ஒரு பார்வை பார்த்த விவேக்,
"என்ன இன்னைக்கு ஒரே அதிர்ச்சி மழையா தர? ஃப்ரண்ட் டோர் திறந்ததற்கு ஏதாவது சொல்லப் போறன்னு நினைச்சேன்..." என்றான்.