(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"இதில் என்ன இருக்கு? ஃபிரன்ட்ல இருக்க இந்த இரண்டு சீட்டிற்கும் நடுவில் கிட்ட தட்ட பதினஞ்சு செண்டிமீட்டர் இடைவெளி இருக்கு, அப்புறம் என்ன? உங்க கூட லஞ்ச்க்கு வரேன்னு சொல்லியப் பிறகு இதெல்லாம் என்ன?"

  

"அது என்னவோ சரி, ஆனால் பாரதி மேடம் இதை எல்லாம் சொல்லும் போது தான் அதிசயமா இருக்கு!!!"

  

"இருக்கும் இருக்கும்!!!"

  

"நீ பவித்ரா வீட்டிற்கு போகலையா? அங்கே தான் இருப்பன்னு நினைத்தேன்..."

  

"நேற்று வரை அங்கே தான் இருந்தேன். எல்லோரும் அங்கே தங்க தான் சொன்னாங்க. எனக்கு தான் மனசில்லை. என்ன தான் க்ளோஸ் என்றாலும், ரொம்ப நாள் அப்படி எல்லாம் தங்கி இருந்து டிஸ்டர்ப் செய்யக் கூடாது தானே?"

  

"இதில் தொந்தரவு செய்ய என்ன இருக்கு? நீ தான் இப்படி யோசிக்கிற. எனக்கு தெரிந்து அவங்க எல்லோரும் உன்னைக் குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்குற மாதிரி தான் தோணுது."

  

"அது நான் இப்படி இருப்பதால் தான், விவேக்."

  

"மே பீ... ஆமாம், நான் இன்னைக்கு உன் ஹாஸ்டல் வந்ததை அந்த பாட்டி கூப்பிட்டு சொன்னாங்களே வித்தியாசம் ஏதாவது தெரிந்ததா?"

  

"இல்லையே, என்ன வித்தியாசம்?" என்று கேட்டு அவனை கேள்வியுடன் பார்த்தாள் பாரதி.

  

"எப்போதும், யாரோ வந்திருக்காங்கன்னு தானே சொல்வாங்க, இன்னைக்கு என் பெயரை சொல்லி கூப்பிட்டாங்க தானே?"

  

"அட ஆமாம்!"

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.