பேசியப்படி கோபாலபுரம் அருகில் இருக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டலை இருவரும் வந்தடைந்தார்கள். பாரதிக்கு அதுப் போன்ற பெரிய உணவகங்களுக்கு வந்து பழக்கமில்லை. அவளையும் அறியாமல் அவள் முகத்தில் தயக்கத்தின் சாயல் தோன்றியது. அவள் முகத்தை பார்த்தே அவள் மனதை புரிந்துக் கொண்ட விவேக், அதைப் பற்றி பேசாது,
"ஒரு வழியா இன்னைக்கு எங்க குக் சமையலில் இருந்து தப்பித்து இங்கே வந்தாச்சு..." என்றான்.
"எப்போவும் வீட்டில் தான் சாப்பிடுவீங்களா?"
காரில் இருந்து இறங்கி அதை பார்க் செய்ய சொல்லிவிட்டு, பேசியபடி இருவரும் உள்ளே சென்றனர்.
"ஆமாம் 99% வீட்டு சாப்பாடு தான். இது போல் மீட்டிங், அப்புறம் என் ஃப்ரெண்ட்ஸ் கூட அவுட்டிங் என்றால் வெளியே சாப்பிடுவேன்..."
அவர்களுக்கு என ஒரு மேஜையை ஒதுக்கப்படவும், அங்கே அமர்ந்து பேச்சை தொடர்ந்தனர். பேசியபடி, மேஜை மீது வைக்க பட்டிருந்த அழகு மலர்களை பார்த்த பாரதி,
"வாவ், இந்த பிங்க் கலர் பூ என்ன அழகு!" என்றாள்!
விவேக்கிற்கு அந்தப் பூவை விட ரசனை மிகுந்திருந்த பாரதியின் முகமே அழகாக தோன்றியது.
தொடரும்...