This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“எதுக்கு இனியா, சுந்தரியைப் பார்ட்டிக்கு உன் கூட வர வேண்டாம்னு சொன்ன?” ஜெயஸ்ரீ ஆஃபிசில் இருந்து திரும்பி இருந்த மகனிடம் கேட்டாள்.
வீட்டுக்குள் வந்த உடன் சுந்தரி கண்ணில் படாதப் போதே என்னவோ விஷயம் இருக்கிறது என்று இனியவனுக்கு தோன்றியது. அது பார்ட்டி கட்டப் பஞ்சாயத்தாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“அங்கெல்லாம் வந்தா அவளுக்கு பிடிக்காதும்மா. அவ தான் இதை எல்லாம் வந்து உங்க கிட்ட சொல்றான்னா, நீங்களும் என் கிட்ட வேற கேக்குறீங்க?” இனியவன் முறைத்துக் கொண்டே பதில் சொன்னான்!
“அம்மா கிட்ட எதுக்கு சத்தமா பேசுற, இனியா? ஜெயா கேட்குறதுல என்ன தப்பு இருக்கு? சுந்தரி உன் மனைவி. அவ போக முடியாத இடத்துல உனக்கு என்ன வேலை இருக்கு?” அருணாச்சலம் தன் பங்கிற்கு மனைவியை தாங்குவதுப் போல காட்டிக் கொண்டு சுந்தரிக்கு சப்போர்ட் செய்தார்.
பெற்று வளர்த்த மகனுக்காக ஒரு வார்த்தை கூட பேசாதவர் புதிதாக வந்திருக்கும் மருமகளுக்காக என்னமாக சப்போர்ட் செய்கிறார்!!! இனியவனுக்கு எரிச்சலாக இருந்தது.
“என் வேலை தொடர்பான பார்ட்டி ப்பா இது. போகாம இருந்தா சரியா இருக்காது.”
அம்மா, அப்பாவின் தாக்குதலை எதிர்கொண்டு, தாங்கி, ஒரு மாதிரியாக தன் அறைக்கு வந்தவன், சுந்தரி வரட்டும் என்று மனதுள் கருவிக் கொண்டான்.
சில நிமிடங்களில், அவன் எதிர்பார்த்ததுப் போலவே சுந்தரி வந்தாள்.
“ஏதாவது சாப்பிடுறீங்களா?”
இனியவன் வாயைத் திறக்கவும் இல்லை அவளுக்குப் பதில் சொல்லவும் இல்லை.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.