தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 32 - பிந்து வினோத்
32. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பழக்க தோஷத்தில் பாரதிக்கு விடிகாலையிலேயே விழிப்பு வந்தது... தூக்கத்தில் ஆழ்ந்திருந்த விவேக்கை பார்த்து ஒரு வெட்கப் புன்னகை சிந்தி விட்டு எழுந்துக் கொண்டாள். தலைக்கு குளித்து, ஹேர் டிரையர் கொண்டு அவளின் நீண்ட கூந்தலை காய வைத்தாள். பின் பொறுமையாக பின்னி விட்டு திரும்பிய பாரதி, இன்னமும் தூங்கி கொண்டிருந்த கணவனை பார்த்து இமைக்க மறந்து நின்றாள்.
முன்தினம் கிட்டத்தட்ட இதே நேரத்தில் தான் அவன் அவள் கழுத்தில் தாலி அணிவித்து அவளுக்கு உறவானான். அப்போதும் கூட அவளுக்கு அவனிடம் பெரிதாக எந்த உறவும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் இப்போது அவன் தான் அவளுக்கு அனைத்துமாக தோன்றினான்... ஒரே நாளில், ஒரே இரவில் தலைகீழ் மாறிவிட்ட தன் மனநிலையை நினைத்து அவளுக்கே சிரிப்பாகவும், வெட்கமாகவும் இருந்தது.
அவனின் ஒவ்வொரு செயலுக்கும் விவேக் ஒரு காரணம் சொன்னதை நினைத்து பாரதியின் முகத்தில் இருந்த புன்சிரிப்பு பெரிதானது... அவனையே பார்த்த படி நின்றவளுக்கு, அவன் விழித்துக் கொண்டால் அவனை நேராக பார்த்து பேச இயலுமா என்று சந்தேகமாக இருந்தது... ஆனால் வெளியே செல்லவும் தயக்கமாக இருந்தது... விவேக்கின் கண்களை சந்திப்பதற்கு வெட்கமாக இருக்கவும், பவித்ராவையும், உமாவையுமே சமாளித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, மேஜை மேலே இருந்த நகைகளை சத்தமில்லாமல் அதே மேஜையை திறந்து வைத்து விட்டு, விவேக்கின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தாள்.
🌼🌸❀✿🌷
பவித்ராவும், உமாவும் மும்முரமாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரும் முன்பே அறிமுகமானவர்கள் என்ற போதும், கடந்த சில நாட்களில், திருமணத்திற்காக என்று அடிக்கடி சந்தித்ததில் இன்னமும் நெருக்கமாகி இருந்தார்கள். அறையில் இருந்து வெளியே வந்த பாரதியை முதலில் பார்த்தது பவித்ரா தான். தோழியைப் பார்த்து மகிழ்ச்சியாக கை அசைத்தவள், அவளின் முகத்தில் தெரிந்த தயக்கத்தைக் கண்டு அவளை கேலி செய்ய மனதில் தோன்றிய ஆவலை அடக்கிக் கொண்டாள். பவித்ராவின் பார்வையை தொடர்ந்து திரும்பி பார்த்த உமாவின் முகத்திலும் புன்னகை தோன்றியது. பாரதி அவர்களின் அருகில் வரும் முன், எதுவும் சொல்லாது இயல்பாக அவளிடம் பேசுமாறு உமாவின் காதில்