(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

அஹல்யா க்ரில் கதவின் பக்கத்தில் நிற்பது அபினவின் கண்ணோரம் தெரிந்தது. அவள் பக்கமாக திரும்பிப் பார்த்தான். அவள் அருணை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

அவளுடைய கணவன் எங்கே? எதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இவர்களிடம் இப்படி வேற்றுமை பாராட்டுகிறார்கள்?

  

“பால் போடுங்க, போடுங்க!”

  

அருண் குரல் கொடுக்கவும், அஹல்யா பற்றிய யோசனையை விட்டு விட்டு அருணுக்கு ஈசியாக இருப்பது போல பாலை மெதுவாக போட்டான் அபினவ்.

  

எல்லா பாலையும் சிக்சர் அடிக்க விரும்புபவன் போல பேட்டை சுழற்றினான் அருண். ஒன்றிரண்டு பந்துகள் மட்டும் பேட்டில் பட்டது. அப்போதும் அபினவ் பால் எடுக்கப் போகும் முன், “நானே எடுத்துட்டு வரேன்” என்று பாலின் பின்னே ஓடி எடுத்து வந்தான்.

  

அவனின் துள்ளல், பேட் செய்வதில் தெரிந்த ஆர்வம் அனைத்தும் விளையாடுவதற்கு அவனுக்குள் இருந்த ஏக்கத்தை தெளிவாக காட்டியது.

  

அதனாலேயே நேரம் போவதைக் கண்டுக்கொள்ளாமல் அவனுடன் தொடர்ந்து விளையாடினான் அபினவ்.

  

“நான் ரொம்ப டையர்ட். தண்ணி குடிச்சுட்டு வரட்டுமா? நீங்க போயிடுவீங்களா?” போய் விடாதே என்று சொல்லாமல் சொன்ன அருணின் கேள்விக்கு,

  

“நான் இங்கே தான் இருப்பேன் நீ போய் தண்ணி குடிச்சுட்டு வா” என்றான் அபினவ்.

  

“ஒன் மினிட்ல வந்திருவேன். இங்கேயே இருங்க. எங்கேயும் போயிடாதீங்க.” திரும்ப திரும்ப அவன் சொல்லிவிட்டு போகவும் அபினவ் அசையாமல் அங்கேயே நின்றான்.

  

உள்ளே சென்ற வேகத்தில் திரும்பி வந்த அருண், அபினவிடம் ஒரு வாட்டர் பாட்டிலைக்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.