மண்டபத்திற்கு வெளியே கோமளாவோ தாத்தா நாராயணனிடம்
”இதப்பாருங்க நீங்க பண்றது தப்பு, என் பொண்ணு இருக்கறப்ப எப்படி நீங்க இந்த கல்யாணத்தை நடத்தலாம், நான் விடமாட்டேன்” என சண்டைக்கு வரவும் அதற்கு தாத்தா
”இதப்பாரு கோமளா நீ பண்றதுதான் தப்பு, உன் பொண்ணு யாரையோ காதலிச்சி கர்ப்பமாகி குழந்தையை பெத்துக்கிட்டா அதுக்கு என் பேரன் வெற்றிதான் காரணமா. இப்ப சொல்றேன் உன் பொண்ணு தாமரையை என் பேரன் ஏத்துக்கமாட்டான்” என கோபத்தில் பொங்கவும் அங்கு சுப்பிரமணி வந்தார்
”ஏய் நீயா எதுக்கு வந்த இங்க, உன்னாலயும் உன் பொண்ணாலயும் நாங்க பட்டது போதாதா போ இங்கிருந்து”
“என்ன விரட்டறீங்க நான் யார்ன்னு மறந்து போச்சா உங்களுக்கு, எங்க உங்க சம்சாரம் கூப்பிடுங்க” என கத்த
”இதப்பாருங்க தேவையில்லாம இங்க பிரச்சனை பண்ண வராதீங்க கிளம்புங்க இங்கிருந்து” என கத்தியும் பலனில்லாமல் கோமளா அவர்களை தாண்டிக் கொண்டு உள்ளே நுழைய முற்பட ஜகா வந்தான்
”டேய் தள்ளி நில்லுடா”
“இதப்பாரு வேணாம் உள்ள அண்ணன் கல்யாணம் நடந்துக்கிட்டு இருக்கு, இப்ப நான் உன்னை உள்ள விடவே மாட்டேன் அப்படியே கிளம்புடு அதான் உனக்கு நல்லது” என சொல்ல
”டேய் வழியை விடுடா உன்னால என்னை எதுவும் செய்யமுடியாது”
“ஏன் செய்ய முடியாது நான் ஒண்ணும் இந்த வீட்டுக்காரன் கிடையாது. அண்ணாவோட எடுபிடி அவருக்கு ஏதாவதுன்னா நான் பாரத்துட்டு சும்மா இருக்க மாட்டேன் உன்னையும் இங்கிருந்து விரட்டாம விடமாட்டேன்” என குறுக்கே வந்து அவளது கையை பிடித்து இழுத்து
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.