(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

ஆசைப்படுறான்.”

  

“அவனோட விளையாடினா அம்மா திட்டுவாங்க,” என்று ரொம்ப ரொம்ப அமைதியான குரலில் சொன்னான் ஒரு சிறுவன்.

  

“எங்கம்மாவும் திட்டுவாங்க!” என்றான் இன்னொருவன்.

  

“என்னை அப்புறம் எங்கம்மா விளையாடவே விடமாட்டாங்க,” என்றான் அடுத்த சிறுவன்

  

அருணின் முகம் விழுந்துப் போனது. விட்டால் அழுது விடுவான் போல இருந்தது.

  

அபினவிற்கு அவர்கள் எல்லோர் மீதும் கோபமாக வந்தது.

  

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இருக்கிறோம்! மார்ஸிற்கு சென்று வாழத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறோம். ஆனால் இப்போதும் சின்னக் குழந்தைகள் மத்தியில் பாகுபாடை சொல்லி வளர்க்கிறோம்! ச்சீ!!!

  

“அவங்களை விடு அருண். நான் உன் கூட விளையாடுறேன். நீ வா. உன் கிட்ட பேட் பால் இருக்கா?” என்று அருணிடம் கேட்டான் அபினவ்.

  

ஹை ஜம்ப் குதிப்பதுப் போல துள்ளிக் குதித்த அருண், “இருக்கு, இருக்கு நான் எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே ஓடினான்.

  

இரண்டே வினாடிகளில் சின்ன பேட் மற்றும் பாலுடன் வந்து அபினவ் முன் நின்றான்.

  

“நீ பேட் செய்றீயா, பவுல் செய்றீயா?” என அவனிடம் கேட்டான் அபினவ்.

  

“பேட்டிங் பேட்டிங்!” என குதித்தான் அருண்.

  

“சரி, நீ இங்கே நில்லு. நான் அந்தப் பக்கம் இருந்து பவுல் செய்றேன்.”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.