“ஏன் ரதி, இந்த நகை எல்லாம் இருப்பது எனக்கு தானே எக்ஸ்ட்ரா வேலை... அதனால தான் நீயும் ஃபீல் செய்றீயா?”
விவேக்கின் கிசுகிசுப்பான குரலிலும், அவன் சொன்ன விஷயத்திலும் முகம் சிவந்த பாரதி,
“விவேக்!” என்றாள் சிணுங்கலாக...
“ரதி, இன்னைக்கு மார்னிங் டைம் வேஸ்ட் ஆகிடுச்சே... சரி, நம்ம மச்சான் வீட்டில் மேட்னி ஷோ வச்சுப்போம்...”
சொல்லி கண்ணடித்தவனை செல்லமாக அடித்தாள் பாரதி. ஆனால் கண்களில் சந்தோஷம் மின்ன, வெட்கத்துடன் அவள் சிரிப்பதை பார்த்த விவேக், அவள் முகம் நோக்கி குனிந்தான்.
🌼🌸❀✿🌷
ஒரு சில நிமிடங்கள் கழித்து, தயாராகி அறையில் இருந்து வெளியே வந்த பாரதியின் கன்னங்களில் ரோஜாக்களும், கண்களில் நட்சத்திரங்களும் மின்னின... புது மணமகளுக்கே உரிய வெட்கத்துடன் அவள் வரவும், பவித்ராவே அசந்துப் போனாள்! பாரதியை அவளுக்கு கல்லூரி நாட்களிலேயே தெரியும் என்றப் போதும், இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கும் பாரதியை இதற்கு முன் பார்த்த நினைவு அவளுக்கு இல்லை... அதுவும் அவளின் பெற்றோரின் மறைவுக்கு பின் தனக்கென ஒரு வட்டம் அமைத்து கொண்டு வெளியே வர மறுத்த பாரதியை இப்படி பார்த்த போது பவித்ராவிற்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரே வந்தது. பாரதியை கவனித்து விட்டு பவித்ராவிடம் ஏதோ சொல்ல திரும்பிய உமா, பவித்ராவின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து விட்டு,
“என்ன பவித்ரா இது? நீ இப்படி உணர்ச்சி வசப்பட்டால் எப்படி? பாரதி நல்ல இடத்துல இருக்கா... இனி எப்போதும் விவேக் அவளை கவனித்துக் கொள்வார்... உனக்கு கவலையே வேண்டாம்.” என்றாள் தேற்றுபவளைப் போல!
“விவேக்கை மட்டும் இல்லை உமா, உன்னையும் நம்பி தான் இருக்கேன்... பாரதி மற்ற