தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 38 - பிந்து வினோத்
38. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதி முகத்தில் வெட்கம் கலந்த குறுநகை உதயமானது!
“இல்லை பவி, விவேக் நிறைய தடவை சாரி சொன்னார், நான் அவர் கிட்ட பேசவே இல்லை...” என்றாள்,
பாரதி அருகே நாற்காலியை நகர்த்தி நெருங்கி அமர்ந்த பவித்ரா, மிகவும் மெல்லியக் குரலில் தோழியிடம் பேசினாள்.
“பாரு, சில விஷயங்களை நீ புரிஞ்சுக்கனும். உனக்கு இந்த வேலை பிடிக்கும்ங்குற காரணத்துக்காக தானே விவேக்கும், அவருடைய அம்மா அப்பாவும் எந்த கேள்வியும் கேட்காம இருக்காங்க... இத்தனை நாள் லீவ் எடுக்காமல், இந்த வேலையையே எப்போவும் நினைச்சுட்டு இருந்த, சரி! ஆனால், இனிமேல் உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு தானே? உன் ஹஸ்பன்ட்க்காக ஒரு மணி நேரம் லேட்டா வந்தால் என்ன குறைஞ்சுப் போகப் போகுது...?”
“ப்ச்... அது இல்ல பவி...எல்லோரும் என்ன நினைப்பாங்க?”
“க்கும்... மற்றபடி நினைக்க மாட்டாங்களாக்கும்... அவங்க என்ன நினைத்தால் தான் என்ன? நீ இப்போ சாதாரண ஆள் இல்லை பாரு, மிஸர்ஸ் பாரதி விவேக்... அதுக்கு தனி மரியாதை உண்டு... நீ இப்படி லூசு மாதிரி மூஞ்சியை தூக்கி வச்சு விவேக்கை கடுப்பேத்தாம, இந்த புது ப்ரிவிலேஜை சரியா யூஸ் செய்துக்கோ...”
“ம்ம்ம்ம்...” என்ற பாரதியின் முகத்தில் சில பல உணர்வுகள் வந்துப் போனது...
பாரதி கோபப் படுவாள் என்று யோசித்திருந்த பவித்ராவிற்கு ஆச்சர்யம் தான்... ஆனாலும், பேச்சை அத்தோடு நிறுத்தாமல்,
“விவேக்குக்கு ஃபோன் செய்து பேசு...” என்றாள்.
பவித்ரா பேசி முடிக்கவும், பாரதியின் செல் ஃபோன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. அழைப்பது விவேக் என்பது தெரிந்ததும், பவித்ராவிடம் ஜாடையில் சொல்லி விட்டு, அங்கே இருந்து