“நோ நோ... நாம போக தான் போறோம்... சரி அதை விடு, நீ இப்போதெல்லாம் ஊருக்கு போறதில்லையா ரதி?”
“ப்ச்... இல்லை... ரொம்ப நாள் ஆச்சு... அங்கே போனால், பழைய ஞாபகம் எல்லாம் வரும். கஷ்டமா இருக்கும்...”
பாரதி அதை சொன்ன விதம் விவேக்கின் மனதை அசைத்தது...
பாரதியை அவள் பிறந்து, வளர்ந்த அந்த வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என மனதில் முடிவு செய்தவன், அந்த பேச்சை அப்போதைக்கு மாற்ற விரும்பியவனாக,
“ஆமாம், நான் உன் முகம் ஏன் வாடிப் போச்சுன்னு கேட்டப்போ, உனக்கு என்ன அவ்வளவு ஆச்சர்யம்?” என வினவினான்.
பாரதி உடனே பதில் சொல்லவில்லை. அவள் முகத்தில் தயக்கத்தின் சாயல் தெரிந்தது...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...