மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 26 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
போலீஸ் ஸ்டேஷனில் தென்றல்வாணனின் கேள்விகளுக்கு எந்த டென்ஷனும் இல்லாமல் பொறுமையாக பதில் சொன்னான் 'அவன்'.
“என் பேரு சாந்ததுரை சார். நான் ஒரு டாக்டர். சென்னையில ப்ராக்டிஸ் செய்றேன்.”
“இந்த டீடெய்ல்ஸ் வெரிஃபை செய்ய ப்ரூஃப் தர முடியுமா?” எனக் கேட்டான் தேன் சந்தேகத்துடன்.
“கட்டாயம் சார். நான் ஃபோன் நம்பர் தரேன், நீங்களே கால் செய்து பேசுங்க.”
“உங்க ஃபேமிலி காணாம போன கேஸ் இன்னும் எங்க ஸ்டேஷன்ல இருக்கு தெரியுமா? அதை பத்தி உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” தென்றல்வாணன் எதரி இருந்தவனை எடைப் போட்டுக் கொண்டே அந்தக் கேள்வியைக் கேட்டான்.
“சார், நான் தர நம்பர்க்கு ஃபோன் செய்துப் பேசுங்க. அவங்களே உங்களுக்கு வேண்டிய விபரம் சொல்வாங்க.”
சாந்ததுரை எழுதிக் கொடுத்த பேப்பரை வாங்கிய தென்றல்வாணன் அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.
அதைக் கவனித்த சாந்ததுரை, “உங்க ஆச்சர்யம் புரியுது சார். ஃபிப்டீன் இயர்ஸ் பேக் எனக்கும் அப்படி தான் இருந்துச்சு,” என்றான்.
“பை தி வே, பாட்டி ராஜான்னு பேரு சொன்னாங்களே???” இப்போதும் சந்தேகம் மின்னக் கேட்டான் தேன்.
“அது அவங்க என்னை செல்லமா கூப்பிடுற பேரு சார்!”
சாந்ததுரை கொடுத்த நம்பருக்கு ஃபோன் செய்து நிறைய நிமிடங்கள் பேசினான் தென்றல்வாணன். இறுதியில்,