“ஓகே சார் புரியுது. நானும் ரகசியத்தை மெயின்டெயின் செய்றேன்,” என்று முடித்து ஃபோனை வைத்தான்.
“சாரி பார் தி ட்ரபிள் மிஸ்டர் சாந்ததுரை. சக்தி ஒரு எக்ஸ் போலீஸ் வுமன். உங்களை திருடன்னு நினைச்சு அடிச்சிட்டாங்க. அதை மனசில வச்சுக்காதீங்க. எங்க ஊருல நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க.”
“அதெல்லாம் வேண்டாம் சார். நல்ல ஹோட்டல் இருந்தா சொல்லுங்க, ரொம்ப பசிக்குது,” என்றான் சாந்ததுரை.
“எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான இன்வெஸ்டிகேஷன் இருக்கு டாக்டர். வெளியே உங்களை அழைச்சுட்டுப் போக டைம் இல்லை. நான் இப்போ வீட்டுக்கு சாப்பிடப் போறேன், என் கூட வாங்களேன். வீட்டுலேயே சாப்பிட்டு நீங்க ரெஸ்ட்டும் எடுக்கலாம்.”
“வீட்டு சாப்பாடா சார்? நான் வரேன் சார்,” என்றான் சாந்ததுரை மகிழ்ச்சியுடன்.
🌼🌸❀✿🌷
சாந்ததுரை தென்றல்வாணனுடன் அவன் வீட்டிற்கு வந்தப் போது, சக்தியும் அங்கே தான் இருந்தாள்.
“சத்யா, விபரம் எல்லாம் அப்புறம் சொல்றேன். இவருக்கு பசிக்குதாம் டிஃபன் ரெடி செய்துக் கொடு.” தென்றல்வாணன் தன் பாணியில் மனைவியிடம் சொன்னான்.
சத்யாவும் சக்தியும் பார்த்துக் கொண்டார்கள். ‘இவன் தான் அவன்,’ என்று சக்தி சத்யாவிடம் கண்களால் சொன்ன செய்தி இரண்டு ஆண்களுக்கும் புரிந்தது.
சத்யா நெடியவனை இன்னும் கூடுதல் ஆர்வத்துடன் கவனித்தாள்.