மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 27 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தென்றல்வாணன் அங்கே இருந்து சென்ற உடனேயே சக்தியும் கிளம்ப தயாரானாள்.
“சத்யா, அஹல்யா ஸ்டேஷனுக்கு போறதுக்கு முன்னாடி அவக் கிட்ட பேச நான் விருப்பப் படுறேன். அவளுக்கு ஹெல்ப் அவசியம்னு எனக்கு தோணுது. அபினவ் இருக்க எமோஷனல் ஸ்டேட்ல அவரால அவளுக்கு கைட் செய்ய முடியுமான்னு தெரியலை. நான் உன் ஃப்ரென்ட்ன்னு அவக் கிட்ட இன்ட்ரோ செய்துட்டு பேசுறேன்.”
“என்னை விட்டுட்டு நீ மட்டும் போறதுக்கு சான்ஸே இல்லை. நீ ஜீப்ல போய் இரு. நான் டூ மினிட்ஸ்ல வரேன்,” என்று சொல்லி சக்தியை தடுத்தாள் சத்யா.
சாப்பிட்டு முடித்திருந்த சாந்ததுரை அவர்கள் இருவரின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான். கிளம்பிய சக்திக்கு கை அசைத்து ‘பை’ என்றான். சக்தி அவனைப் பார்த்து மீண்டும் ஒரு உஷ்ண முறைப்பைக் கொடுத்து விட்டு சென்றாள்.
“டிவி பார்க்குறீங்களா? தூங்குறீங்களா?” என அவனிடம் விசாரித்தாள் சத்யா.
“என்னைப் பத்தி கவலைப் படாதீங்க சிஸ்டர். நீங்க போயிட்டு வாங்க,” என்றான் சாந்ததுரை.
“தேங்க்ஸ் ப்ரதர். அந்த ரூம் நல்ல காத்தோட்டமா இருக்கும். நீங்க நல்லா படுத்து தூங்கலாம். வேற எங்கேயாவது போகனும்னா ஜன்னல் எல்லாம் நீங்க தேட வேண்டாம். இதோ இருக்கு பாருங்க இதுக்கு பேரு கதவு. இதுல இருக்க தாழ்ப்பாளை ஓபன் செய்தா போதும்! ஓபன் ஆகும்!” சத்யா சீரியஸாக பேசுவதுப் போல அவனை கலாய்த்தாள்!
“ரொம்ப டீஸ் செய்றீங்க சிஸ்டர்,” என்றான் சாந்ததுரை மெல்லிய சிரிப்புடன்.
“நீங்க செய்ததுக்கு வேற என்ன செய்றது ப்ரோ??? ஓகே, டைம் ஆச்சு. உங்க லேடி ராம்போ வெயிட் செய்துட்டு இருக்காங்க. நான் அவங்களோட போயிட்டு சீக்கிரம் வந்திருவேன். எதுக்காவது தேவைப்பட்டா இது என் ஹஸ்பன்ட் நம்பர் அவரை கால் செய்ங்க.” மேஜை மீதிருந்த நோட்பேடில் வேகமாக நம்பரை கிறுக்கி சாந்ததுரையிடம் கொடுத்தாள் சத்யா.