என்ன, எனக்கு தெரியுமான்னு தானே உன் கிட்ட கேட்டாங்க?”
“ம்ம்ம்...”
“அப்புறம்?”
“ஏன் நீங்க அவங்க கிட்ட சொல்லலைன்னு கேட்டாங்க...”
“ஓ! நீ என்ன சொன்ன?”
“உங்களை தான் கேட்கனும்னு சொன்னேன்...”
“அட! இதோ பாருடா!!! ரதி மேடம் கூட இந்த விவேக்கை கேட்க சொல்லி எல்லாம் சொல்றாங்க...”
“ப்ச்... ஆனந்த்...”
பாரதியின் அழைப்பு விவேக்கை வழக்கம் போல் மயக்கவும், அவளின் கன்னத்தை காதலுடன் வருடிக் கொண்டே,
“ரதி, ரிஸார்ட் போக எல்லாம் எடுத்து பேக் செய்து வச்சுட்டீயா?? நாளைக்கு ஈவ்னிங் கிளம்பனும்...” என்றான்.
“கட்டாயம் போகனுமாங்க?”
“கட்டாயமா போய் தான் ஆகனும்..."
பாரதி எனக்கு பிடிக்கவில்லை என்பதுப் போல ஒரு பார்வை பார்க்கவும்,
"என்ன லுக் விடுற? நேத்து கூட நீ நம்ம பே ஆஃப் பெங்கால் அலையில் ஈரமான புடவையில் நிக்குற மாதிரியும், நான் உன் பக்கத்தில் நின்னு அதை ரசிக்குறது மாதிரியும் கனவு