(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 48 - பிந்து வினோத்

48. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

விவேக் ரொம்பவும் அதிகமாக பில்ட்-அப் கொடுத்திருந்ததால், முதலில் பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை!

  

விவேக் அவள் முன் நீட்டி இருந்த மொபைலை கேள்வியுடன் பார்த்தாள்... ஏதோ போட்டோவை காட்டுகிறானா, அல்லது வீடியோ ஏதாவதா???

  

கேள்விகளுடன் விழித்தவள், 'பாரதி விவேக்' என்ற பெயர் கண்ணில் படவும், ஃபோனை கையில் வாங்கினாள். அவளின் கண்கள் இப்போது ஆர்வத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தது...

  

தண்ணீரினால் சரியாக தெரியாத டிஸ்ப்ளேவை உற்றுப் பார்த்தவள், ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனாள். அவளின் முகமாற்றங்களை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் விவேக்.

  

நம்பமுடியாமல் மொபைல் ஸ்க்ரீனை ஸ்க்ரோல் செய்தாள் பாரதி...

  

பெண் என்ற பெயரில் அவள் எழுதிய கதைகள் ஒரு மின்-நூலாக பிரசூரிக்கப் பட்டிருந்தது. பாரதி விவேக் என்ற பெயரில் வெளி வந்திருந்த அந்த மின்-புத்தகம் அவளை மெய் சிலிர்க்க வைத்தது... 'பாரதி விவேக்' என ஒளிர்ந்த திரையை மெல்ல விரல்களால் தொட்டுப் பார்த்தாள்... பெண்ணிற்கு கணவனின் பெயர் தான் முகவரி என்று அவள் நினைக்கவில்லை என்றபோதும், யாரும் இல்லை என்று அவள் மனதில் இருந்த எண்ணத்தை ஏற்கனவே மாற்றி இருந்த விவேக், இப்போது அதை செயல் முறையிலும் காட்டவும் பாரதி நெகிழ்ந்துப் போனாள்.

  

தேங்க்ஸ்...” என்று சொன்ன போது அவளின் குரல் அவளுக்கே அதிசயமாக இருந்தது.

  

விவேக் பதில் சொல்லாமல் அவளையே ஒரு எதிர்பார்ப்போடு பார்க்கவும், புரிந்துக் கொண்டவளாக அவனருகில் நெருங்கி, அவன் கன்னத்தில் அன்புடன் முத்தமிட்டாள் பாரதி.

  

தேங்க் யூ ஆனந்த்...”

  

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.