“என்னாச்சும்மா, ஏன் இப்படி இருக்க?”
திடீரென கேட்ட கணவனின் குரலில் தடுமாறி நிமிர்ந்த கற்பகம், அந்த குரலில் இருந்த கனிவை உணர்ந்து, புன்னகையுடன்,
“ஒண்ணுமில்லை நரேன். அப்பப்போ என்னுடைய பென் எல்லாத்தையும் எங்கேயாவது வச்சிடுவேன்... தேடும் போதும் ஒன்னும் கிடைக்காது... எத்தனையோ முறை புலம்பி இருக்கேன்...” என்றாள்!
“அது தான் எனக்கும் தெரியுமே...”
“ம்ம்ம்... ஆனால் இதுவரைக்கும் யாருமே அதை பெரிசா எடுத்துக் கிட்டது இல்லையே... பாரதி ஏன் எனக்கு பென் ஸ்டான்ட் வாங்கி வந்தான்னு உங்களுக்கு புரியுதா?”
மனைவியை கூர்மையாக பார்த்த நரேந்திரன்,
“எனக்கு புரிறது இருக்கட்டும்... உனக்கு புரிஞ்சது தானே? அப்புறம் ஏன் அப்படி பேசின?” என வினவினார்.
ஒரு சில நொடிகள் பதில் சொல்ல தயங்கிய கற்பகம், பின்,
“அவக் கிட்ட எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லவோ, தேங்க்ஸ் சொல்லவோ மனசு வரலைங்க...” என்றாள்!
“அது தான் ஏன்?”
“....”
அமைதியாக இருந்த மனைவியை கனிவாக பார்த்த நரேந்திரன்,