“என்னடா எனக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்... இன்னுமொரு சந்தோஷமான விஷயமும் இருக்கு... நேத்து நாம கிளம்பும் பொது ஆடிட்டர் ஃபோன் செய்தாரே ஞாபகம் இருக்கா? நம்ம புது கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் விஷயமா தான் பேசினார்... நம்மோட ஃபார்வர்ட் ப்ரைவேட் லிமிட்டட் இப்போ அஃபிஷியல் கம்பெனி...”
“வாவ்! கங்க்ராட்ஸ் ஆனந்த்!”
“ம்ம்ம்ம்...??? ஒரு கதைக்கு இருக்க மதிப்பு என்னுடைய கம்பெனிக்கு கிடையாதா? அதுக்கு மட்டும் கிஸ், இதுக்கு வெறும் கங்க்ராட்ஸ் தானா? நீ ரொம்ப மோசம் ரதி...”
“நானா? நீங்க தான் மோசம்...” என்றபடி அவன் மூக்கை பிடித்து செல்லமாக அவள் ஆட்டவும், விவேக்கிற்கு மற்றது எல்லாம் மறந்து போனது...! தன்னை மறந்தவனாக மனைவியை இறுக அணைத்து அவள் உதடுகளில் முத்தமிட்டான்! அதன் பின் கணவன் மனைவி இருவருக்குமே சுற்றி இருக்கும் மொத்த உலகமும் மறந்துப் போனது.
இரண்டு நாள் என்பது இரண்டு வினாடிகளாக அவர்களுக்கு பறந்துச் சென்றது. மனமே இல்லாமல் ரிசார்ட்டில் இருந்து கிளம்பியவர்கள், பாரதியின் அவசர ஷாப்பிங்கிற்காக சற்றே தாமத படுத்தி பதினோரு மணி அளவில் வீட்டை அடைந்தார்கள்.
குடும்பத்தினர் அனைவரும் தூங்கி இருப்பார்கள் என அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, அவர்கள் இருவரையும் வரவேற்க நித்யா உட்பட அனைவருமே விழித்திருந்தார்கள்! பாரதியை பார்த்ததும் நித்யா கையை அசைத்து அவளை மகிழ்ச்சியுடன் அழைக்கவும், அவசரமாக அருகில் இருந்த சிங்க்கில் கையை கழுவி வந்து குழந்தையை கைகளில் வாங்கி கொண்டாள் பாரதி.
“சித்தியை பார்த்த உடன் என் செல்லத்திற்கு சந்தோஷத்தை பாரு...” என்று உமா சொல்லவும்,
“பாப்பாக்கு மட்டுமா, குழந்தையை தூக்க ஆள் வந்ததில் அம்மாக்கும் தான் சந்தோஷம்... உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே உமா!” என கிடைத்த சாக்கில் மனைவியை கிண்டல் செய்தான் நிரஞ்சன்.