”எதுக்கு என் புள்ளையை அடிச்சீங்கன்னு கேட்டேன்”
”அவன் என்ன பேசினான் தெரியுமா”
”அதுக்குன்னு அவனை அடிப்பீங்களா, தந்தை சொல்லே மந்திரம்னு நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்பட்டு இருந்தவன் இன்னிக்கு அவன் வாழ்க்கையை தொலைச்சிட்டு விரக்தியில உங்களை எதிர்த்து இரண்டு வார்த்தை பேசினதும் உங்களுக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்து எல்லார் முன்னாடியும் அவனை அடிப்பீங்களோ”
”ஏற்கனவே இந்த வீட்ல மருமகள் இருக்கறப்ப, எதுக்காக சின்ன மருமகள் வரனும்”
”இருக்கறவதான் என்னிக்கிருந்தாலும் இங்கிருந்த போறதிலயே குறியா இருக்காளே, அவளை என்னா பிடிச்சா வைக்கமுடியும், அவளா ஓடிப்போய் நம்ம மானத்தை வாங்கறதுக்கு அவளை அவள் போக்குல விட்டுட்டு அடுத்து என்ன செய்யனும்னு யோசிக்கனும்ல”
”அதுக்கு என்ன செய்யலாம்ங்கற”
என கேட்க உடனே மங்களம் மஹதியிடம் சென்று நின்று தன் கணவரைப் பார்த்து
”இவள்தான் நம்ம வீட்டு சின்ன மருமகள், ஜானகி நம்ம பையனை விட்டு போன உடனே அவனுக்கும் இவளுக்கும்தான் கல்யாணம்”
”யார் இதை முடிவு செய்தது”
”நான்தான்”
”நீயாரு முடிவு செய்றதுக்கு”
”நான் அவனோட அம்மா, பத்து மாசம் சுமந்து பெத்து வளர்த்திருக்கேன், உங்களை விட