ஒண்ணுமே புரியலை”
”உனக்கு என்னோட திட்டத்தை சொல்லிட்டு அப்புறம் வரலாம்னு இருந்தேன் ஆனா, எங்க உன் அப்பா அம்மா அவசர அவசரமா என்னை அலங்காரம் செய்து கூட்டிட்டு இங்க வந்துட்டாங்க”
“ஆமா என் அத்தைக்கு எப்படி உன் நாடகம் தெரியும்”
”அவங்களுக்கு எதுவும் தெரியாது, இது நாடகம்னு இப்போதைக்கு உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்“
“அப்புறம் எப்படி அவங்க உன்னை சின்ன மருமகள்ன்னு கூப்பிட்டாங்க” என ஜானகி கேட்க அதற்கு மஹதியோ ”அதுக்கு காரணம் உன் அப்பாதான் பொழுது விடியறதுக்கு முன்னாடியே உன் அத்தையை பார்த்து என்னைப் பத்தி சொல்லிட்டாங்க”
“இதுக்கு அவங்க எப்படி சம்மதிச்சாங்க”
”எப்படியிருந்தாலும் நீ வேங்கையனோட வாழ்க்கையை விட்டு போன பின்னாடி அவன் தனியாயிடுவான்ல, வேற கல்யாணம் கூட செய்துக்க மாட்டான்ல, அப்படி நடந்துடக் கூடாதுன்னு நினைச்சி என்னை சின்ன மருமகளா ஏத்துக்க சம்மதிச்சாங்க”
”ப்ச் இது வேண்டாத வேலைடி, கொஞ்சம் பொறுத்தா 6 மாசத்துல நானே இங்கிருந்து போயிடப்போறேன்”
”நீயும் உன் நினைப்பும் உன் மாமா வீரசிங்கத்தோட பேச்சைப் பார்த்தியா, அவரை மீறி உன்னால இந்த வீட்டை விட்டு ஒரு அடி நகர முடியுமா சொல்லு” என சொல்ல ஜானகி வீரசிங்கம் என்றதும் நடுங்கிப் போனாள்
”ஆமாம்டி நீ சொல்றதும் வாஸ்தவம்தான்”
”ஜானு இப்பகூட நான் உனக்காகதான் வந்தேன், இருக்கற நாட்கள்ல இங்கிருக்கிறவங்க மனசுல நான் இடம்பிடிக்கனும், எல்லாரும் என்னை சின்ன மருமகளா ஏத்துக்கனும், உன்