“பாரதி, பார்த்து வாயில ஈ போக போகுது...!!!”
உமாவின் கேலியில் ஒரு அசட்டுப் புன்னகையுடன் அவசரமாக பார்வையை திருப்பிய பாரதி, அவள் அருகில் வந்து விட்டிருந்த விவேக்கின் கையைப் பற்றிக் கொண்டாள்...
“சீக்கிரம் வாங்க ஆனந்த், சாப்பிட்டு கிளம்புவோம்... ரொம்ப லேட் ஆச்சு, நான் தான் அப்போதே...”
பாரதி முழுவதுமாக பேசி முடிக்கும் முன், வேகமாக அவனின் கையைப் பற்றி இருந்த அவளின் கையை விலக்கிய விவேக்,
“எனக்கு முக்கிய மீட்டிங் இருக்கு நான் கிளம்புறேன்... நீ சாப்பிட்டுட்டு ஒரு டாக்ஸி பிடிச்சு போ...” என்று சொல்லி விட்டு அவளின் பதிலுக்கும் காத்திருக்காது நடந்தான்.
பாரதி திகைத்துப் போய் நின்றிருந்தாள். விவேக் தனியாக டாக்ஸியில் போக சொன்னது கூட அவளை பெரிதாக பாதிக்கவில்லை, வேலை இருப்பதை காலையிலேயே சொல்லி இருந்திருக்கலாமே? கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக அவனுக்காக அவள் காத்திருந்திருக்கிறாள்... அவளுடன் காலை உணவை முடித்து விட்டாவது அவன் கிளம்பி இருந்திருக்கலாமே? அல்லது, அவளிடம் அவனின் மீட்டிங் பற்றி சொல்லவாவது செய்திருக்கலாமே? இது என்ன புதிதாக???
பாரதியின் அருகில் வந்த உமா,
“பாரதி, அவருக்கு ஏதாவது அவசர வேலை வந்திருக்கும். நீ சாப்பிட்டு கிளம்பு...” என்றாள் அவளை தேற்றும் விதமாக.
“ம்ம்ம்...”
“புருஷன் எப்போதும் பொண்டாட்டி பின்னாடியே சுத்திட்டு இருக்க முடியுமா என்ன? வேற