(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

மாணவர்களின் அவசரத் தேவைக்கு என்று காலேஜில் இருந்த பொது தொலைபேசி அறைக்கு சென்ற பிறகு தான் கணவனின் அலுவலக தொலைப்பேசி எண் அவளிடம் இல்லை என்பது பாரதியின் நினைவில் வந்தது. அவசரமாக யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தவளாக, நினைவில் இருந்த வீட்டு எண்ணை டையல் செய்தாள். உமாவோ, மதுவோ எடுக்க வேண்டுமே என்று மனதில் வேண்டியபடியே தான் காத்திருந்தாள். அவளின் விருப்பம் போலவே உமா ஃபோனை எடுத்துப் பேசினாள்.

  

உமா, அவர் ஆஃபிஸ் நம்பர் என் கிட்ட இல்லை. அவர் வர லேட் ஆகுமான்னு கேட்கனும். நம்பர் தரீங்களா?”

  

மறுப் பக்கம் இருந்து உமாவின் பதில் ஒரு சில வினாடிகள் தாமதத்திற்கு பின் தயக்கத்துடன் ஒலித்தது.

  

விவேக் நாலு மணிக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்துட்டாரே பாரதி. நீ தனியா வருவேன்னு சொன்னார். அப்போ இருந்து ஆஃபிஸ் ரூமில் தான் இருக்கார். நான் அவரை உன்னை பிக் அப் செய்ய வர சொல்லவா?”

  

நாலு மணிக்கா? அவளிடம் விவேக் ஒன்றும் சொல்லவே இல்லையே? காலேஜிற்கு வந்ததாகவும் தெரியவில்லையே???

  

ஏன் இப்படி செய்கிறான்???

  

பாரதிக்கு குழப்பமும் வருத்தமும் ஒன்றாக மனதினுள் தோன்றியது!

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.