”என்ன சொல்லனும்“
”ஜானகி என் வாழ்க்கையில இல்லைன்னு நான் முடிவு எடுத்து எனக்குன்னு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்காக என் அம்மா எனக்காக ஒரு பொண்ணை பார்த்து கூட்டிட்டு வந்து என்வீட்ல தங்க வைச்சிருக்காங்க ஆனா, ஜானகி புதுசா வந்த சின்ன மருமகளை விரட்ட நினைக்கறா, நீங்கதான் என் வாழ்க்கையை காப்பாத்தனும், உங்களைதான் நான் மலை போல நம்பியிருக்கேன், என் அப்பாவும் என்னை கைவிட்டுட்டாரு, என் அம்மா மட்டும்தான் எனக்கு துணையா இருக்காங்க, என் சார்பா நீங்க வந்து தங்கி எனக்கு ஆதரவு தரனும், அப்பதான் என்னால புது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும், கோர்ட் முடிவு எனக்கு தேவையில்லை எப்போ ஜானகி என்னை வேணாம்னு சொல்லிட்டாளோ, அப்பவே நானும் அவளை வேண்டாம்னு விட்டுட்டேன் ஆனா, எங்கப்பா என்னையும் ஜானகியையும் பிரிந்து வாழ விடமாட்டார் போல இருக்கு, நீங்கதான் எனக்கு ஆதரவு தரனும், எனக்கு உதவி செய்ங்கன்னு சொல்லி கைகூப்பி கெஞ்சுங்க, அப்படியே உண்மை மாதிரியே நடிக்கனும் ஒரு இடத்தில கூட அவங்களுக்கு சந்தேகமே வரக்கூடாது சரியா”
“சரி நீ எப்படி சொல்றியோ அப்படியே செய்றேன் ஆனா எனக்காக அவங்க வருவாங்களா”
”கண்டிப்பா வருவாங்க ஏன்னா இதுல மூர்த்தியும் ஒரு அங்கமா இருக்காப்ல, நாளைக்கே வேங்கையன் வாழ்க்கை நாசமா போனதுக்கு மூர்த்தியும் காரணம்னு ஒரு அவப்பெயர் அவங்களுக்கு வரக்கூடாதுன்னு நினைப்பாங்க, கண்டிப்பா உங்களுக்கு உதவ வருவாங்க”
“அப்போ ஜானகி“
”அதை அப்புறம் பார்த்துக்கலாம் விடுங்க”
”சரி சரி”
”வந்ததில இருந்து உங்க பிரச்சனையை பத்தியே பேசிக்கிட்டு இருக்கோமே, ஒரு பேச்சுக்கு என்னை பத்தி தெரிஞ்சிக்க உங்களுக்கு ஆர்வம் இல்லையா” என கேட்க அவனோ