சொல்லி அவளின் தலைமேல் சத்தியம் வைக்க உள்ளம் குளிர்ந்தாள் மஹதி.
அதே நேரம் மங்களம் அங்கு வந்தார். இருவரின் நெருக்கத்தை தவறாக புரிந்துக் கொண்டு
”நான் எதையும் பார்க்கலை“ என சொல்ல இவ்விருவரும் அதிர்ந்து விலகி நின்றார்கள்.
”அம்மா வாம்மா உள்ள வாம்மா” என அழைக்க மங்களமும் அவர்களிடம் வந்து நின்று மஹதியை பார்த்து
”சின்ன மருமகளே” என அன்பாக அழைக்க அவளோ
”சொல்லுங்க அத்தை” என்றாள் பாசமாக
”உனக்கு என்ன வேணும்னாலும் கேளு நான் செய்றேன்”
”கண்டிப்பா கேட்கறேன் அத்தை“
”என் புருஷனை நினைச்சி பயந்து இங்கிருந்து போயிடாத, அவர் கொஞ்சம் கரடுமுரடா இருந்தாலும் மனசு இலவம் பஞ்சு போல மென்மையா இருக்கும், நீ பழகி பாரு உனக்கே வித்தியாசம் தெரியும்”
”சரிங்கத்தை”
”ஜானகி உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டது நினைச்சி நீ வருத்தப்படறியா”
”சே சே அதெல்லாம் இல்லை அத்தை, அவங்க செய்தது நியாயம்தானே“
”எது நியாயம் இதுவா இங்க இருந்து என் மகனோட வாழறதை விட்டுட்டு தேடி வந்த உன்னை போய் விரட்டப் பார்க்கிறாளே மனுஷியா அவள்“