புறப்பட்டாள்.
மாதவிக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை ஆனால் கண்ணகி மட்டும் நம்பிக்கையுடன் இருந்தாள்.
”கண்ணகி”
”ம்”
”எதுக்கு எட்டரைக்கே போகனும் ஒன்பது மணிக்கே போகலாம்ல”
”இல்லைடி ஆபிஸ் ஒர்க் பென்டிங்ல இருக்கு அதான்” என சொல்ல அவளும் மற்ற கதைகளை பேசிக் கொண்டே வண்டியை ஓட்டினாள். சிறிது நேரத்தில் காலேஜ் வந்துவிட வண்டியை விட்டு கண்ணகி இறங்கி கூடவே வண்டியை ஓரம்கட்டிவிட்டு மாதவியும் இறங்கி வந்தாள்
”நீ எங்க வர்ற ஆபிசுக்கு போகலையா”
”போறேன் போறேன் முதல்ல காலேஜ்க்கு மாணவர்கள் வராங்களான்னு பார்க்கிறேன்”
”என் மேல நம்பிக்கையில்லையா உனக்கு”
”இருக்கு இருந்தாலும்” என அவள் இழுக்க கண்ணகியோ
”சரி வா” என தன்னுடன் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
காலேஜே காலியாக இருந்தது வாட்ச்மேன் செக்யூரிட்டி ப்யூன் தவிர ஒருவரும் இல்லை அதைக்கண்ட மாதவியோ
”நான்தான் சொன்னேன்ல கேட்டியா நீ இப்ப பாரு யாருமேயில்லை மாணவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாத அன்பா நடந்துக்க அப்புறம் உன் பேச்சை அவங்க கேட்பாங்க”