“ஹேய், என்ன நீ? இப்படி கேள்வி மேல கேள்வி கேட்க தான் என்னை வேலை செய்ய விடாமல் டிஸ்டர்ப் செய்தீயா?”
“ம்ம்ம்... என்ன, இப்போ எல்லாம் நீ காலேஜூக்கு சீக்கிரம் வர மாதிரி இருக்கு??”
கேலியாக கேட்பதுப் போல் கேட்டு விட்டு தோழியை மீண்டும் கூர்ந்து கவனித்தாள் பவித்ரா. தலையை சற்று குனிந்து, மேஜை மீது இருந்த பேனாவை எடுத்து ஏதோ கிறுக்கிய பாரதி,
“பெருசா காரணம் எதுவும் இல்லை பவி. வீட்டில் அவரும் ரொம்ப பிஸி... அது தான் என் நேரத்தை கொஞ்சம் யூஸ்ஃபுல்லா ஸ்பென்ட் செய்யலாம்னு நினைச்சேன்...” என்றாள் மெல்லியக் குரலில்.
பவித்ராவால் நம்ப முடியவில்லை... பாரதி அவளிடம் பொய் சொல்கிறாள்!
பவித்ரா அமைதியாக இருக்கவும், பாரதி நிமிர்ந்துப் பார்த்தாள்.
“என்னாச்சு பவி?”
பாரதி தன்னிடம் உண்மையை சொல்லாது மறைக்கிறாள் என்பதை பவித்ராவால் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள இயலவில்லை... ஆனாலும் மனது கேட்காமல்,
“வேற பிரச்சனை எதுவும் இல்லையே பாரு, கொஞ்சம் டல்லா இருக்க?” என்றாள்.
பாரதி இப்போது மீண்டும் தலையை குனிந்துக் கொண்டாள்...
“அதெல்லாம் எதுவுமே இல்லை பவி... நீ தேவை இல்லாம ஏதாவது யோசிக்காதே...”
“ம்ம்ம்...”
“டூ வீக்ஸ்ல அத்தை மாமாவுடைய வெட்டிங் அனிவேர்சரி வருது... அம்மா, அண்ணா, நித்திலா