அவளின் பேச்சை முழுவதுமாக கூட கேட்காமல் எல்லாம் சரி செய்தாகி விட்டது என்றான்... எதை சரி செய்தான்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை!
கற்பகம் மனதில் இதையெல்லாம் நினைத்தப் படி இருக்க, மற்றவர்கள் தங்களின் பேச்சை தொடர்ந்தார்கள்.
“லெக்சரர் ஜாப் ஈஸின்னு நினைச்சேனே...” என்றான் நிரஞ்சன்.
“ஈஸியாவும் செய்யலாம் அண்ணா... எனக்கே கூட எக்ஸாம் நேரத்தில இவ்வளவு வேலை இருக்கும்னு சின்ன அண்ணி சொல்லாமல் தெரியாது... எக்ஸாம், சிம்போசியம், வேற எந்த ஈவென்ட்டா இருந்தாலும் பாரதி அண்ணி தான் இன்சார்ஜ்... எங்க எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச லெக்சரர் அவங்க...”
மது பேசிக் கொண்டே போனாள்... அவளின் அருகில் அமர்ந்திருந்த உமாவிற்கும் பாரதி மீண்டும் வேலைகளை எடுத்து செய்யும் காரணம் புரிந்தது. விவேக்கிற்கு திடிரென என்ன ஆகி விட்டது என்று கேள்வி அவளையும் குடைந்தது... அதை விட பாரதியை நினைத்து அவளுக்கு கவலையாக இருந்தது.
பாரதி தினமும் காலையில் சீக்கிரம் கிளம்பி சென்று, மாலையில் தாமதமாக வீடு திரும்பினாள்... வீட்டில் இருக்க நேர்ந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் புத்தகத்தில் முகத்தை மறைத்துக் கொண்டாள்... காலையில் உணவு உண்பதில்லை... மதிய உணவு எடுத்து செல்வதில்லை... இரவில் வீட்டில் உண்பதுமில்லை... கணவன் மனைவி இருவரும் இதில் மட்டும் ஒற்றுமையாக இருந்தார்கள்... அப்படி அன்னியோனியமாக இருந்தவர்களுக்கு என்ன தான் வந்து விட்டது? ஒருவேளை அவளுடைய கண் தான் பட்டு விட்டதோ என்னவோ!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...