நமக்குள் வராத ஊடலா, சொல்லு?”
"ம்ம்ம்...”
“சரி இப்போ சொல்லு, நாளைக்கு நாம போகலாமா வேண்டாமா?”
சில வினாடிகள் யோசித்த பவித்ரா, “இல்லைங்க... எனக்கு என்னவோ நாளைக்கு அந்த ஃபங்க்ஷனுக்கு போக விருப்பமில்லை... நீங்க வேணா போயிட்டு வாங்க...” என்றாள்.
“சரி, உன்னை நான் கம்பல் செய்யலை... நாளைக்கு மீட்டிங் எல்லாம் டைமுக்கு முடிஞ்சா ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு நான் போறேன்... இல்லைன்னா இன்னொரு நாள் நாம இரண்டுப் பேருமா போகலாம்...”
“சரிங்க... அப்படியே செய்யலாம்...!” என்று சொல்லி அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் பவித்ரா!
🌼🌸❀✿🌷
விவேக்கின் வீட்டில் பங்க்ஷனிற்கான ஏற்பாடுகள் களைகட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் பெற்றோரின் திருமண நாளை கொஞ்சம் விமர்சையாக கொண்டாடுவது நிரஞ்சன், விவேக், மதுவின் வழக்கம். இந்த வருடம் மற்ற வருடங்களை விட எல்லா ஏற்பாடும் ஜோராக நடந்துக் கொண்டிருந்தது.
பாரதி திருமணமாகி வந்தப் பிறகு அந்த வீட்டில் நடக்க இருந்த முதல் ஃபங்க்ஷன் என்பதால், புத்தகத்தில் முழ்கி இருப்பதாக காட்டிக் கொண்டிருந்த பாரதியை, இழுத்து வந்து உமாவும், மதுவும் வழக்கமாக அவர்கள் செய்யும் விஷயங்களை அவளுக்கும் சொல்லிக் கொடுத்தார்கள்.
விருந்தாளிகள் பட்டியலில் உள்ள பெயர்களை பார்த்து ஒவ்வொருவர் பற்றியும் பாரதியிடம் விபரம் சொன்ன மது... பட்டியலில் இருந்த ஒரு பெயரை கவனித்து,
“சின்ன அண்ணி, நாளைக்கு மிசர்ஸ் டெய்சி சைமன் வருவாங்க போல... நீங்க அவங்களை