கிட்ட தப்பா பேசி இருக்கார்!”
“இதெப்படி உனக்கு தெரிஞ்சது?”
“அஹல்யா கிட்ட பேசும் போது அஹல்யா சொன்னாங்க!”
“ஐ சீ!”
“வா சக்தி, அந்த டாக்டர் கிட்ட நேரா போய் பேசுவோம். அவன் தான் இதெல்லாம் செய்றான்னு நினைக்கிறேன்.”
சக்தி சத்யாவைப் போல அவசரப் படவில்லை. அமைதியாக யோசித்தாள்.
“என்ன சக்தி அமைதியா இருக்க?”
“டாக்டர் கிருஷ்ணா கிட்ட போய் பேசுறதுக்கு முன்னாடி அஹல்யா சொன்னது உண்மைன்னு நமக்கு சொல்லக் கூடிய இன்னொருத்தங்க கிட்ட பேசனும் சத்யா!”
“அஹல்யாவையும் நம்ப மாட்டீயா நீ?”
“அப்படி இல்லை சத்யா. டாக்டர் கிருஷ்ணாவை நல்லா தெரிஞ்சவங்க யார் கிட்டேயாவது முதல்ல பேசனும்!"’
“அவரோட மனைவி கிட்ட பேசலாமா?”
“ஹுஹும். அவங்களுக்கு தெரிஞ்சு இருக்குறதை விட அதிகமா தெரிஞ்சவங்க ஒருத்தங்க இருக்காங்க!”
“யாரு?”
“டாக்டர் கிருஷ்ணா கிளினிக்ல இருக்க நர்ஸ்!”