”இதெல்லாம் சரியில்லை நான் போலீஸ் ஸ்டேஷன் போவேன்”
”தாராளமா போய் வாங்க, வேணும்னா நானே போலீஸை இங்க வரவழைக்கிறேன் இங்க ரூம்ல சிசி கேமரா இருக்கு, நீங்க வந்தது பேசினது எல்லாமே பதிவாயிருக்கு, அதை அப்படியே அவங்களுக்கு போட்டு காட்டறேன், யார் மேல தப்புன்னு அவங்க பாடம் எடுப்பாங்க” என சொல்லியவள் போன் செய்ய டெலிபோன் ரிசீவரை எடுக்க அதைக்கண்டு அவர்கள் பதறினார்கள், இப்போது இறங்கி வந்து பேசினார்கள்
”இதப்பாருங்க எனக்கொன்னும் உங்க பையனை அடிக்கனும் திட்டனும்னு ஆசையில்லை அவன் ஒழுங்காயிருந்தா நாங்க ஏன் அப்படி நடந்துக்கப் போறோம் அவன் ஒழுங்கா படிக்கனும் அவ்ளோதான்”
”படிப்பான் இனிமேல நல்லபடியா படிப்பான்”
”ஒழுங்கா வகுப்புக்கு வரனும்”
”கண்டிப்பா வருவான்”
”ஒருவேளை அவன் தப்பு செய்தா நாங்க கண்டிப்போம் அதுக்கு நீங்க குறுக்கவரக்கூடாது”
”இல்லை கண்டிப்பா இல்லை அவன் ஒரு டிகிரி வாங்கிட்டா போதும்”
”நல்லது அவனை விட்டுட்டு நீங்க போங்க” என சொல்ல அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.
கண்ணகியோ அந்த மாணவனிடம்
”என்ன பிரச்சனை உனக்கு இது காலேஜ், இங்க என்ன நடக்கும்னு உனக்கு தெரியாதா, இங்க வர்றவங்க படிக்கதான் வருவாங்க படிச்சா ஒரு டிகிரி கிடைக்கும், அப்புறம் வேலை