தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 59 - பிந்து வினோத்
59. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“பாரதி மாதிரி ஒரு டீச்சர் இல்லைன்னு விஜி புகழ்ந்து தள்ளிட்டா தெரியுமா!!!”
அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் டெய்சி பேசவும், “விஜியா?” என்றாள் பாரதி குழப்பத்துடன்!
“உனக்கு தெரியாதுல, விஜி எங்க ஃப்ரென்ட். அவளுடைய பையனும் உங்க காலேஜில் தான் படிக்குறான்... சும்மா பேருக்காக படிக்குறவன் அவன். அவனுடைய அரியர்ஸ் லிஸ்ட் அவ்வளவு பெரிசு... ஆனால் உன்னுடைய சப்ஜெக்ட்டில் மட்டும் பாஸ் மார்க் வாங்கிட்டானாமே! அவனுடைய அம்மாவாலேயே நம்ப முடியலை... நானும் கற்பகமும் பேசிட்டு இருந்தப்போ வந்து அப்படியே புகழ்ந்து தள்ளிட்டா... எங்களுக்கு தனி ட்ரீட் வேற தரேன்னு சொல்லி இருக்கா... அவ மகன் பேர் என்னோவோ... ஆர்’ல ஆரம்பிக்கும்...”
என்ன சொல்வது என்று புரியாமல், “ஓ!” என்றாள் பாரதி!
“உனக்கு விஜி பையன் பேரு ஞாபகம் இருக்கா கற்பகம்??” டெய்சி தோழியிடம் கேட்கவும், கற்பகம்,
“ம்... ரஞ்சன்...” என்றாள்!
“ஹா... ரஞ்சன்...!!! பேரெல்லாம் நல்லா தான் இருக்கு! ஒரே பையன்னு ஒரே செல்லம். இப்போ புலம்புறாங்க... ஆமாம் பாரதி, அப்படி என்ன மாஜிக் செய்ற நீ?”
“மாஜிக் எல்லாம் எதுவுமில்லை ஆன்ட்டி... நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் இது பெரிய விஷயமே இல்லை...”
“பரவாயில்லையே உனக்கு தன்னடக்கம் கூட இருக்கு! கற்பகம் நீ கொடுத்து வச்சவ தான். இரண்டு மருமகளுமே உனக்கு நல்ல விதமா அமைஞ்சிருக்காங்க!”
டெய்சியின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த பாரதியின் கண்களில் விவேக் வேக வேகமாக மாடியில் இருந்து இறங்கி வருவது பட்டது! கீழே வந்தவன் வாயெல்லாம் பல்லாக யாரையோ